Tuesday, February 20, 2007

மரண கடிகாரம்

மரணத்தை பற்றி இந்தப் பதிவு எழுதியபோது, கண்ணில் பட்டது, இந்த

மரண கடிகாரம்.

முயன்று பாருங்கள். முடிவுகள் பார்த்து ரொம்ப யோசிக்கவோ/கவலைப் படவோ வேண்டாம்.

இருக்கும் நாட்களில், நல்லவை தொடர்வோம், தீயவை களைவோம்!

Life is too good to be spent, worrying.

மரணத்துக்கு பயந்திடு, தயாராகு, திட்டமிடு, உடனே!

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா, மானிடர் ஆன்மா மரணம் எய்தாது. மறுபடிப் பிறந்திருக்கும், என்று கண்ணன் அர்ஜுனனைப் பார்த்து பாடுவது போல் ஒரு காட்சி கர்ணன் படத்தில் வரும். அடுத்தவரின் மரணத்துக்கு காரணமாவதைப் பற்றி கலங்காதே, கடமையை செய், என்று எடுத்துக் கூறும் பாடல்.

மரணம் ஒரு சாதாரண விதிக்கப்பட்ட நிகழ்வுதான். அதை எண்ணிப் பயந்து, நம் வாழ் நாளில், வாழ வேண்டிய நாட்களை அனுபவிக்காமல் இருப்பது முட்டாள் தனம்.

ஆனால், மரணம் அப்படியே புரம் தள்ள வேண்டிய விஷயமுமல்ல.

நாம் முற்றும் துறந்த சன்யாசிகளாக இருந்தால், மரணத்தை கண்டு பயப்படத் தேவையில்லை.

நம்மை சுற்றி ஒரு சார்பு வட்டம் இருக்கும் போது, மரணத்தை பயந்து தான் ஆக வேண்டியிருக்கிறது.

ஒரு பத்து நிமிடம் தனியாக அமர்ந்து சிந்தித்துப் பாருங்கள். இந்தக் கணம், உங்களுக்கு மரணம் வாய்த்தால் (god forbid), உங்களைச் சுற்றி என்ன நடக்கும்?

உங்கள் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்று உங்களை சுற்றி இருக்கும் வட்டத்தில் வாழ்பவர்களின் அடுத்த சில நாட்கள் எப்படி இருக்கும்?

மனதளவில் துக்கம் வாட்டி எடுக்கும் அவர்களை.
அதர்க்கு உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
ஒரு விதத்தில், அவர்கள் துக்கப் படுதலால், நீங்கள் வாழ்ந்த வாழ்வு அர்த்தமானது என்று புலப்படும்.
பலர் துக்கப்பட்டால், நீங்கள் வாழ்ந்த விதம் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது என்றும் புலப்படும்.

உங்கள் பிரியமானவர்கள் மனதளவில் படும் துன்பத்திர்க்கு உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. செய்யத் தேவையுமில்லை. காலம் அதர்க்கான மருந்தை தினம் கொடுத்து, அவர்கள் வேதனையை மறையச் செய்யும்.

ஆனால், இது நாள் வரையில் நீங்கள் தூணாக இருந்து, பொருளாதார ரீதியில் அந்த வட்டத்தை தாங்கிப் பிடித்தவராயிருந்தால் உங்கள் மறைவுக்குப் பிறகு, உங்கள் பிரிய வட்டத்திர்க்கு, வாழ்க்கை பாரமாகிவிடும் அபாயம் இருக்கிறது.

தூணாக இருப்பவர்கள், இந்த 10 நிமிட சிந்தனையில், உங்கள் அன்பு வட்டத்தில் இருப்பவர்களின் பாரம் குறைய என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.

நம்மில் பலர், வங்கிக் கணக்கு, பங்குச் சந்தையில் முதலீடு, வீடு, மனை, காப்பீடு, என்று இன்னும் பல வகைகளில் நம் சம்பாத்யத்தை சேர்ப்பவர்கள்.
இன்னும் சிலர், சுய தொழில் செய்தும் வருபவர்கள் - இதில் வரவேண்டியவை, தர வேண்டியவை என்றும் பெரிய கணக்குகள் இருக்கும்.

இந்த கணக்குகள், முதலீடுகள் பற்றி எல்லாம் உங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதுமா?

அறிவியல் வளர்ச்சி, கணிப்பொறி, internet என்று வளர்ந்து வழும் சூழலில், முன்னர் இருந்தது போல், கையில் ஒரு 'திட' சாட்சியங்கள் கூட இருக்காது (bank passbook, deposit certificates, stock certificate,etc...). எல்லாமே e-வடிவில் தான் இருக்கும்.

திடீரென்று நீங்கள் விட்டுச் சென்றால், உங்களை நம்பி இருப்பவர்கள் நிலை?

அவர்களுக்கு தெரியாத இடங்களில் நீங்கள் முதலீடு செய்து வைத்திருக்கும் பொருள், அவர்களுக்கு கிடைக்காமலேயே போய்விடும் அபாயம் இருக்கிறது.

உங்களை வேதனைப் படுத்த எழுதிய பதிவில்லை இது.

இணைய நண்பன் சாகரன் கல்யாணின், மறைவு எழுப்பிய கேள்விகள் இவை.
என்ன செய்கிறார்கள் அவர் குடும்பத்தினர்?
தேன்கூடு ஆரம்பித்து, வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறதே, இப்படி ஒன்று இருப்பது அவர்களுக்குத் தெரியுமா? இன்னும் பல பல கேள்விகள் நெஞ்சில் எழுந்ததால் வந்த பதிவு இது.

நண்பர்களே, வேக வாழ்க்கை இது. ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி, முதலீடுகளை பட்டியலிட்டு, உங்களைச் சுற்றியுள்ள நம்பிக்கையானவர்களிடம் கொடுத்து வையுங்கள்.


தேவைப் படலாம்! தேவைப் படாமல் இருக்க ஆண்டவன் அருளட்டும்.

வேறு சுலப வழி தெரிந்தவர்கள், உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

இணையத்தில் வேறு ஏதோ தேடப் போனபோது கண்ணில் பட்ட: மரண கடிகாரம்.

நன்றி!

Saturday, February 17, 2007

செய்தி - தெய்வம் நின்று கொல்லும்

2000 ஜனவரியில், ப்ளெஸண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்.

2001ல் ஜெயலலிதாவும் சகாக்களும் உத்தமர்கள் என்று கூறி நீதிமன்றம் இவர்களை அந்த வழக்கிலிருந்து பின்னர் விடுவித்தது.

இப்படி அடிக்கடி நடப்பது நம் நாட்டு அரசியலில் ஒன்றும் புதிதில்லை. எவ்வளவோ வழக்குகள் போடப் படுவதும், விலக்கிக் கொள்ளப் படுவதும் தினம் தினம் நடப்பதுதான்.

எந்த அரசியல் வாதியும் பெரியதாக தண்டனை அனுபவித்த மாதிரி என் நினைவுக்குத் தெரிந்து இல்லை.

இந்த ஜனவரி 2000 தீர்ப்பில், ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்ததை எதிர்த்து, ( கட்சியின் வெறி நாய்கள் சிலதுகளின் தூண்டலின் பேரில்?), தர்மபுரியில் பெரிய கலவரம் வெடித்தது.

சுற்றுலா சென்றிருந்த கல்லூரி மாணவிகளின் பஸ் ஒன்றை வழி மறித்து கொளுத்தினர் இந்த வெறியர்கள். இதில் 3 மாணவிகள் கருகி உயிரிழந்தனர் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி - எவ்வளவோ கனவுகளும், ஆசைகளும், சிந்தனைகளும் இருந்திருக்கும் மாணவிகள். ஒரு சிலரின் சுய லாபத்துக்காக இந்த கொடூர முறையில் இறந்திருக்கிறார்கள்.

அந்த கொடூரச் செயலை செய்த கூட்டத்தில், 3 பேருக்கு தூக்கு தண்டனையும், 25 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்துள்ளார்களாம். சற்று நிம்மதி!

எய்தவன் என்ன ஆனான் என்று தெரியவில்லை.

அயல் நாடுகளில் அரசியல், ஜாதி காரணங்களுக்காக இப்படி கொலைகள் நடப்பது இல்லையே?

அவர்கள் மட்டும் மேன் மக்களா?

நாம் இன்னும் காட்டுமிராண்டிகளாக, சுயநலப் பேய்களாகத் தான் இருக்கிறோமா?

என்று தான் விடிவு?

Wednesday, February 14, 2007

சாகரன் - அஞ்சலி

சாகரன் கல்யாணை நேரில் கண்டதில்லை.

பதிவு எழுத ஆரம்பித்த போது இருந்த சில technical கஷ்டங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொடுத்தார். அந்த அளவில் மட்டுமே பரிச்சயம். கேட்க்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் வரும். அவர் உலகின் வேறு மூலையில் இருந்தது இப்போழுதுதான் தெரியும்.

32 வயது இளைஞன் என்ற விஷயமும் இப்பொழுதுதான் தெரியும். மற்ற பதிவர்கள் அவர் மறைவு குறித்து வேதனைப் படுவதைப் பார்த்தால், அவர் எவ்வளவு இனியவர் என்பது நன்கு புரிகிறது.

திறமைசாலிகள் சிறு வயதில் மறைவது ஒன்றும் புதிதில்லை - விவேகானந்தன் தொட்டு, பாரதி, ராமானுஜன் என்று தொடர்ச்சியாக நடக்கும் ஒரு விடயம் தான் இது. ஏன் என்றுதான் இன்று வரை புரியவில்லை.

அவர் மனைவியும், குழந்தையும், பெற்றோரும், நண்பர்களும், இன்று அனுபவிக்கும் கொடுமை, அப்பப்பா, நினைத்தால் நெஞ்சு நின்று விடும் அளவிர்க்கு கனமாகிறது. எவ்வளவு கொடுமையான ஒரு இழப்பு இது!

இறைவா, இதை தாங்கும் வல்லமையைக் கொடு அவர்களுக்கு.

மனிதர்களை மனிதர்களாய் பாவித்து, ஜாதி மதம் பாராமல் பழகி இருக்கிறார் மனிதர்.
பணம் ஈட்டுவதை முதல் குறிக்கோளாக்காமல், நட்பு, சேவை என்ற ரீதியில் வாழ்ந்திருக்கிறார்.

தமிழ் வளர்க்கும் ஆர்வத்தை, தன் அறிவை உபயோகித்து திறம் பட பல முனைகளில் முடுக்கி விட்டு, ஆலமரம் போல் நமக்கெல்லாம் விட்டுச் சென்றுள்ளார்.

பரஞ்சோதியின் இரங்கல்பா படியுங்கள். மற்ற பதிவர்களின் பதிவுகளையும் படியுங்கள்.

சாகரன் கல்யாணின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்... ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துங்கள்.

இந்த வாரத்திலேனும், அமைதி காத்து, ஒருவரை ஒருவர் சாடாமல், இணையத்தில் சுத்தம் பேணுங்கள் நண்பர்களே! அவரை பற்றித் தெரிந்தவர்கள் பதிவுகள் எழுதினால் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆறுதல் கிடைக்கும்.

When You Go Home, Tell Them Of Us And Say,
For Their Tomorrow, We Gave Our Today


நன்றி.


பி.கு: அவர் குடும்பத்தாருக்கு இந்த சமயத்தில் உடன் இருந்து மன பலம் கொடுப்பதே முக்கியம். உடன் இருக்கும் நண்பர்கள் அதை செய்வார்கள். வரும் காலத்தில், அவர் குடும்பத்திர்க்கு தேவை என்ன என்பதை உடன் இருக்கும் நண்பர்கள் அறிந்து தெரிவித்தால், நம்மில் பலர் இணைந்து தேவையானதை செய்யக் காத்திருக்கிறோம்.
அவர் குடும்பத்தை மறந்து விடக் கூடாது நண்பர்களே!!

Monday, February 05, 2007

அனானிமஸாக வரும் அழுக்கு மடல்களும், சில STAR பதிவர்களும்...

நம் இணையத்தில் நடக்கும் 'அசிங்க' தாக்குதல்கள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஒருவர் பதிவின் கருத்துக்கு எதிர் கருத்து உள்ளவர்கள், அந்த எதிர் கருத்தை கண்ணியமான முறையில் பின்னூட்டமாகவோ/பதிவாகவோ எழுத வேண்டும்.

இப்படிச் செய்யாமல், கெட்ட கெட்ட வார்த்தைகளில், அனானிமஸாக பின்னூட்டம் இடுவதும், மடல் அனுப்புவதும், இந்த எதிர் கருத்து ஆசாமிகளால் செய்யப்படுகிறது.

வக்கிர மனம் படைத்த சிலர், அனானி முகமூடி போட்டுச் செய்யும் இந்த செயல் கண்டனத்துக்குரியது. எதைச் சாதிக்க இப்படி செய்கிறீர்கள்?
இப்படி எல்லாம் ஒருவருக்கு எழுதி அனுப்ப எப்படி மனம் வருகிறது?

கண்ணியம் இல்லாத இந்த அசிங்க psycho வாழ்க்கைக்கு காரணம் என்ன? உங்களின் வளர்ப்பு? தாய்/தந்தை/பாட்டி/தாத்தா வழி வந்த 'gene'? நட்புச் சூழல்?
எதய்யா உன்னை இப்படி செய்யத் தூண்டுவது.

நம் நாடு அழகான வளமையும், கலாச்சாரமும் மிக்க நாடு. இருக்கும் சில கேடுகளும் குறைந்து ஒளிமயமான திக்கை நோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
உன்னால் ஒன்றுக்கும் உதவ முடியவில்லையா? பரவாயில்லை. முன்னேறுபவர்களையும், முன்னேற்றுபவர்களையும் உபத்திரவம் செய்யாமல் தூரக் கிட!!!

மா.சிவகுமார் ஒரு பெண் பதிவருக்கு வந்த அசிங்க மடல் பற்றி பதிவெழுதியிருந்தார். இப்படி எல்லாம் ஒரு பெண்ணுக்கு மடல் அனுப்பிய அனானி, உண்மையில், மன நலம் பாதிக்கப் பட்டவனாகத் தான் இருக்க முடியும். இவ்வளவு வக்கிர புத்தி உடையவன், வாழ்க்கையில் என்ன சாதிக்கப் போகிறானோ? அவன் இல்லத்தார், உற்றார், உறவினர் அனைவருக்கும் இவனால் என்னென்ன கேடுகள் வருமோ.

அனானி நண்பரே - வேண்டாமய்யா இந்த வேலையெல்லாம். மாட்டிக் கொண்டால் வாழ்க்கையே திசை மாறிப் போகும். படித்தது வீணாகும். நண்பர், தாய், தந்தையர் முகத்தையெல்லாம் பார்க்கவே கூசும். யோசித்து செயல் படு!

இந்த மாதிரி தாக்குதலை சந்திக்கும் நண்பர்கள், இதை துச்சமாக மதித்து உதாசீனப் படுத்தலாம்.
உதாசீனப் படுத்த விரும்பாதவர்கள், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள காவல் நிலையங்களில் தைரியமாக புகார் கொடுக்கலாம் (அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தியா வில் இதற்கு வழி வகைகள் உண்டு). இன்று புகார் கொடுத்தால் நாளை விடை கிடைக்காது. பொறுத்திருந்து, பொறி வைத்து மெதுவாக செயல்படுவார்கள்.

இன்னொரு விஷயம், இந்த மாதிரி controversy topics பற்றி யாராவது பதிவு எழுதினால், நம் வலையுலகில் இருக்கும் சீனியர் பதிவர்கள் பல பேர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதில்லை. ஏன் இப்படி ஒதுங்கி இருக்கிறீர்கள்?

நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறந்து, இந்த வக்கிர தாக்குதலுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்! எல்லோரும் சொன்னாலாவது, வக்கிரங்கள் குறையுமா என்று பார்க்கலாம்.

சிவகுமாரின் அந்த பதிவு இங்கே.
உங்கள் SUPPORT காட்டுங்கள் பார்ப்போம்.

நன்றி நண்பர்களே!

அனானி,
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

சாந்தி, முதல்வர், பெண்மை, துயரம், உயரம், நம்பிக்கை !

ஓட்டப் பந்தைய வீராங்கனை சாந்தி சந்தித்த பிரச்சனைகள் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். அவரின் பேட்டி ஒன்று விகடனில் படிக்கக் கிடைத்தது.

அதிலிருந்து சிலவற்றை இங்கு பதிகிறேன்.

மனதை கனமாக்கும் அவரின் அனுபவங்கள் வேதனையத் தந்தாலும், தடைகளைத் தாண்டி அவர் அடைந்துள்ள உயரம் வியக்க வைக்கிறது.

பி.கு. படத்தின் மேல் தட்டினால், படம் பெரிதாகத் தெரியும்.


---

---

---

---




வாழ்க பாரதம்!

நன்றி: விகடன்