Thursday, August 30, 2007

எந்த ஆணும் மூழு ஆணல்ல

கீழே Click செய்து மேல் விவரங்கள் படிக்கலாம்.

......எந்தப் பெண்ணும் முழு பெண்ணல்ல!

Don’t harbor hatred, it only tears down your soul
Don’t hold grudges, it only eats you up whole
Smile, GOD has given you another day
Laugh, no matter what people say
Do good, it makes you feel a world apart
Love others, it’s good for your heart
Live, Laugh and Love – Life is too short not to

-Yorlanda Jackson

இந்த மாதிரி தமிழில் எழுதி பதியுங்களேன்.

தேங்கி நிற்கும் சாக்கடை விலகி, நீரோட்டம் பெருகட்டும்.

கவிதை வெள்ளப்பெருக்கில் கசடுகள் அகலட்டும்.

Wednesday, August 15, 2007

தேன்கூட்டில் சில புற்றீசல்கள்

எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டு, உழைப்பையும், பணத்தையும், சொந்த நேரத்தையும் செலவு செய்து ஒரு அழகான தேன்கூடு கட்டப்பட்டது.

கூட்டைக் கட்டியதும் தன் கடமை முடிந்ததென ராஜாத் தேனீ பறந்து வேறிடம் சென்றது.

தேனீக்களும் தன்னால் முடிந்த தேனை சேகரித்து, கூட்டை நன்றாகவே பேணிக் காத்தன.

ஆனால், யார் கண் பட்டதோ, புற்றீசல்கள் சில அந்த தேன்கூட்டை சூழ்ந்து, தேன் கெட்டுப் போகும் அளவுக்கு தங்கள் விகாரங்களை வித்திட்டன.

கூடு பிழைக்குமா? புற்றீசலின் கனம் தாங்காமல், தரையில் விழுந்து உடையுமா?

ராஜாத் தேனீ, வருத்தத்துடன் மேலிருந்து வட்டமிட்டுப் பார்த்துக் கண் கலங்குகிறது.

...................................................
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

புற்றீசல்களை பிய்த்தெடுத்து, தேனீக்கள் வாழ வழி பிறக்கட்டும்!

ஜெய்ஹிந்த்!
...................................................

Monday, August 06, 2007

ஆதிமூலம், சென்னை - by, மரக்காணம் பாலா

இன்னொரு துப்புரவுத் தொழிலாளியின் கண்ணீர் கதை. மரக்காணம் பாலாவின் புகைப்படங்களை மேயும் பொழுது கண்ணில் பட்டது.

யாராவது இந்த வேலை செய்தாகவேண்டுமே, இதை ஏன் இவ்வளவு பெரிது படுத்த வேண்டும் என்று எனக்கும் தோன்றியுள்ளது.
அமெரிக்காவிலும் கூட‌ இந்த வேலையை செய்பவர்களை டி.வியில் பார்த்திருக்கிறேன்.
ஆனால், அவர்களெல்லாம் உடல் முழுக்க மூடிக்கொள்ளும் ரப்பர் உடையும், முகத்தில் முகமூடியும் போட்டு பத்திரமாகத் தான் செய்வார்கள்.

ஆதிமூலம் உடம்பில் துணியும் இல்லை.
வேலை முடிந்து அவர் பேருந்தில் செல்ல முடியாதாம்.
நடந்தேதான் செல்வாராம். மற்றவர்களுக்கு நாற்றம் எடுக்கும் என்ற கவலை அவருக்கு.
கண்பார்வையும் சரியில்லையாம்.

ஹ்ம். பாவம், என்று தான் விடியுமோ இவர்களுக்கெல்லாம்.

நாமும் கூட, இந்த மாதிரி ஆட்களை வழியில் பார்த்தால், தூர விலகி நடந்து போய்விடுவோம்.

இனியாவது, ஒரு நிமிடம், அந்த மனிதர்கள் படும் வேதனையை சிந்தித்துப் பார்த்து, உங்களால் முடிந்தால், உங்கள் ஊரில் பொருப்பில் உள்ள‌ மேலாளர்களுக்கு எடுத்து கூறி ஏதாவது செய்யப் பாருங்கள்.

பூனைக்கு ஒருவர் மணி கட்டினால், பல ஊரிலும், பல ஆதிமூலர்கள் பயன் பெறுவார்கள்.

முழு சோகத்தையும் படிக்க இங்கே செல்லுங்கள்.

More Pictures - here & here.

ஹ்ம். இந்தியா ஒளிருமா?

மரக்காணம் பாலா, தொடரட்டும் உங்கள் பணி.
இப்படிப்பட்ட உண்மை சோகங்கள் படித்துப் படித்து, என்றாவது ஒரு நாள் நமக்கு சுரணை வந்து ஏதாவது நல்லது நடக்கும்.