Sunday, November 26, 2006

அவசர சந்திப்பு - கருணாநிதி, ஜெயலலிதா, விஜய்காந்த், வை..(2)



இதன் முதல் பாகத்தை இங்கே படிக்கவும். (அதை படிச்சுட்டு இத படிங்க. இல்லன்னா continuity போயிடும். ஒண்ணும் புரியாது. அப்பறம் examla திரு திருனு முழிக்க வேண்டியதாயிடும் :) )

அவசர சந்திப்பு - பாகம் ஒண்ணு
...
தொண்டையை adjust பண்ணியபடி கருணாநிதி பேச ஆரம்பிக்க எல்லாரும் அமைதியாக கேட்க ஆரம்பித்தனர்.

அனைவருக்கும் இளநீர், காபி, டீ வழங்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு flask'ல் இருந்து பாதாம் பால் எடுத்துக் கொடுத்துக் கொடுத்தார் சசி.

'லூசுப் பெண்ணே' என்று பி.ஜெ.பி கணேசனின் செல்-போன் திரும்ப சிணுங்கியது. எல்லோரும் அவர் பக்கம் திரும்பி முறைக்க, அசடு வழிந்து கொண்டே செல்-போனை அணைத்து உள்ளே வைத்தார்.

கருணாநிதி பேச ஆரம்பித்தார் "அன்பார்ந்த கழக நிர்வாகிகளே, கூட்டணி நண்பர்களே, எதிர் கட்சி தலைவர்களே, வணக்கம். அழைத்தவுடன் வந்தமைக்கு நன்றி. (சசிகலாவை பார்த்து)அழைக்காமல் வந்தமைக்கு வந்தனம். சேரன், சோழன், பாண்டியன் என்று செங்கோல் பூண்டு ஆட்சி செய்த மன்னர்கள்"...

"I object" என்று விஜய்காந்த் குரல் கொடுத்து மேசையை தட்டினார்.
தட்டிய தட்டில், ஜெயலலிதா குடித்துக் கொண்டிருந்த சூடான பாதாம் பால் மேசையில் கொட்டி வைகோவின் முகத்தில் தெறித்தது. எரிச்சலில் ஓ என்று கத்தினார் வை.கோ.

"என்ன வை.கோ, planned execution மாதிரி தெரி்யுது. அம்மா வேணும்னே சான்ஸ் கடச்ச உடனே, பால் எடுத்து உங்க மேல கொட்டிட்டாங்களோ" என்று மெதுவாக வை.கோவின் காதில் ஓதினார் ராமதாஸ்.

'ச ச, அதெல்லாம் இல்ல தாஸ்,accidents happen. இது கை தவறி நடந்ததுதான். பு.தலைவி அப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க. விஜய்காந்த் வேணும்னா, ஏதாவது மனசுல வச்சு இப்படி தட்டி இருக்கலாம். அவர வேணா கேட்டுப்பாருங்க", என்று வை.கோ திரும்ப ஓதினார்.

தான் பேசும்போது 'object' சொன்ன விஜய்காந்தை பார்த்து, கடுப்பான கருணாநிதி, "ஏய்யா விஜயகாந்து, என்னய்யா objection உனக்கு? இன்னும் நான் பேசவே ஆரம்பிக்கல, அதுக்குள்ள என்ன ஆச்சு உனக்கு" என்றார்.

"அதில்ல CM sir, இங்க இருக்கறது நம்ப மட்டும் தான். நீங்க என்னுமோ பொதுக்கூட்டத்துல பேசுர மாதிரி, தூய தமிழ்ல அடுக்கிக்கிட்டே போறீங்க. பல்லவன், சோழன் எல்லாம் பேசாம, சொல்ல வந்தத சீக்கிரம் சொன்னீங்கன்னா, கேட்டுட்டு shooting போவேன். அதுக்குத்தான் object போட்டேன்" என்று கட்டைக் குரலில் விஜய்காந்த் பதிலினார்.

கணேசன் இதை கேட்டவுடன், தானும் மேசையை தட்டி, "எனக்கும் ஜவுளி கட திறக்க தாம்பரம் போகணும். விஜய் சொல்ற மாதிரி சட்டுனு பேசி முடிச்சீங்கன்னா, நல்லா இருக்கும்" என்றார்.

மற்றவரும் இதை ஆமோதிக்க, அன்பழகன், கருணாநிதியின் script ஐ எடுத்து கீழே போட்டார். "கருணா, எல்லாரும் சொல்றது சரிதான் எழுதி வச்சத படிக்காம, மனசுல பட்டத அப்படியே சொல்லு. இப்பெல்லாம் தூய தமிழ்ல நீ பேசினா கேக்கர மக்களுக்கு ஒரு எரிச்சல் வருதுனு loyola தாடிக்காரர் survey எடுத்து சொன்னது சரிதான் போல" என்று கருணாநிதியின் காதில் கிசுகிசுத்தார்.

"You too அன்பு" என்பது போல் அன்பழகனை ஒரு பார்வை பார்த்து, "சரிப்பா நீங்க சொல்றது சரிதான். சொல்ல வந்தத சொல்றேன் கேளுங்க" என்று பேச ஆரம்பித்தார் கருணாநிதி.

"எனக்கு வயசாவுது. தமிழனுக்காக உழைச்சு 70 வருஷத்துக்கு மேல ஆச்சு. என் மொத்த வாழ்க்கையும் தமிழனின் நலனுக்கு மட்டும் தான் அற்பணிச்சிருக்கேன். அண்ணா காட்டிய வழியில் இவ்ளோ நாள் பயணிச்சாச்சு. மக்களுக்காகவே இவ்வளவு நாள் வாழ்ந்தும், இன்னும் பலர் நான் என்னமோ அவங்கள ஏமாத்திட்டதாகவும், பலரின் பட்டினிக்கு நான்தான் காரணம் என்ற ரீதியில் பேசிக்கராங்க.
மனசு அளவுல யாருக்கும் கெடுதல் நெனச்சதுல்ல நான். என் தமிழனின் வாழ்வு வளம் பெறணும் என்ற ஒரே எண்ணம் தான் என் எல்லா முடிவுகளிலும், திட்டங்களிலும் இது நாள் வரையில் இருந்திருக்கு.
இடயில், சில, பல பல சுய லாபங்கள், நானும், என் குடும்பத்தாரும் அடைந்திருக்கலாம்.
என்ன பண்றது, நல்லவனா இருந்தா மட்டும் போதாதே, பண பலமும், படை பலமும் இல்லன்னா இங்க அரசியல் பண்ண முடியாத மாதிரி சூழல் உருவாக்கி வச்சிருக்கமே.

இன்று ஊழல் பெருகவும், கயமை உருவாகவும், சுய நலம் பொது நலத்தை மீறவும், இந்த அரசிய சூழல் தான் காரணம்.

கொஞ்ச நாளுக்கு முன் என் பேரனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவன் பாடத்தில் epitaph என்று ஒரு கவிதைத் தொகுப்பு. உயிருடன் இருக்கும்போதே பிரபலங்கள் பல தங்கள் கல்லரையில் எழுதி வைக்கச் சொன்ன வாக்கியங்கள் தான் epitaph.
அதில் கருத்தாழமிக்க ஒன்று ஒரு போர் வீரனுக்காக எழுதியது
To save your world you asked this man to die:
Would this man, could he see you now, ask why?


என் கண்ணை திறந்த இரு வரிகள் இவை. என்னையும் என் கட்சியையும் இது நாள் வரை ஆதிரித்து, கேட்க்கும் போதெல்லாம் வாக்களித்து, எனக்காக உயிரையும் விட்டவர் பலர். நான் இறந்த பின் இவர்களை எல்லாம் காண நேரிட்டால், இவர்களின் கேள்விகளை எப்படி எதிர் கொள்வேன்?
பல முன்னேற்றங்களை என் தமிழ் நாட்டுக்கு நான் செய்திருந்தாலும், இன்னும் பல இடங்களில் பசியும், பட்டினியும், சுகாதாரமும், சாதிக் கலவரமும் கணக்கிலடங்காமல் பெருகிக் கிடக்கிறதே.
இவையெல்லாம் போக்க ஒரு தீர்க்கமான திட்டம் இது நாள் வரையில் தீட்ட முயற்ச்சி மேற்கொள்ளாமல், என் 70 வருட பொதுவாழ்வு வீணாய் போனதோ என்ற திடீர் கலக்கம் எனக்கு."

மடமட என பேசிய கருணாநிதி கண்கள் கலங்க மௌனமானார்.
இதைக்கேட்டுக் கொண்டிருந்த மற்றவர்களும் திகைத்துப் போய் கருணாநிதியை பார்த்தனர்.

"என்ன புதுவிதமான ஸ்டண்ட்டா இருக்கே. எதுக்கு இப்படி அடி போடறாரு" என்று வை.கோ ராம்தாசின் காதில் கிசுகிசினார்.
தயாநிதி, கண்கள் கலங்க அன்பழகனின் தோளில் சாய்ந்தார். "டேய் படம் காட்டாத, சும்மா இரு" என்று அன்பழகன் சொன்னதும் எழுந்து தள்ளி நின்றார்.

"Ok ok. So, what?" என்று ஜெயலலிதா கேள்வி கேட்டார்.
கேள்வி கேட்ட ஜெயலலிதாவை பார்த்து ஷ்ஷ்ஷ் என்றார் அன்பழகன்.
எழுந்து போகப்பார்த்த சசிகலாவை பிடித்து அமர்த்தினார் ஜெயா.

"Mr. கருணாநிதி, இப்பவாவது தப்ப ஒப்புக்கொண்டீர்களே. அப்படியே, என் கல்யாண மண்டபம் இடிப்பதும் தப்புதான்னு இது கூட சேத்து, எல்லாத்தையும் மொத்தமா ஒரு பெரிய அறிக்கையா நாளைக்கு கொடுத்துடலாம் சார். அப்ப நீங்க ராஜினாமா பண்ண போறீங்களா?" என்று வாயெல்லாம் பல்லாக விஜயகாந்த் கேள்விகளை அடுக்கினார்.

"தம்பி விஜய்காந்து, சினிமால நடிச்சு பேரும் புகழும் சம்பாதிச்சு, அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம நிக்கும் போது, உனக்கு மக்கள் மேல அக்கரை வந்திருக்கு தம்பி. நான் பிறந்தவுடன் என் தமிழனுக்கு என் வாழ்வை அற்பணித்தவன். ரெண்டு படம் ஓடலன்னா, உன் நிலை இப்படியே இருக்குமான்னு தெரியாது. என் கதை அப்படியல்ல. மரணப் படுக்கை வரை என் தமிழனுக்கான போராட்டம் தீராது. சும்மா சத்தம் போடாதே. அமர்" என்று கடுப்பானார் கருணாநிதி.

"சரி சரி CM சார், சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன். மேல சொல்ல வந்தத சட்டுனு சொல்லுங்க தலைவரே" என்று அசடு வழிந்தார் விஜய்காந்த்.

ஜெயலலிதாவுக்கு, பாதாம் பால் இன்னொரு கப் ஊற்றிக் கொடுத்தார் சசி. ஜெயலலிதா மிகவும் குழம்பியவராய் காணப்பட்டார்.

"இன்னும் இருக்கப் போறது கொஞ்ச வருஷம்தான். அதுக்குள்ள என்னால் முடிஞ்ச வரை, எழைகள் வாழ்வில் வளம் ஏற்றவும், என் தாய் தமிழகம் ஒளி பெறவும் ஏதாவது செய்யணும்னு முடிவு பண்ணேன்.
பல வருடங்கள் நானும், நண்பன் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அம்மையாரும் மாறி மாறி ஆட்சி செய்தோம். ஒரு பெரிய முன்னேற்றமும் கொடுக்கவில்லை நாங்கள். (ஜெயலலிதா ஏதோ பேச எழ, பேசாமல் அமரச் சொன்னார் கருணாநிதி).
எம்.ஜி.ஆர் நல்லவன். பல கனவு அவனுக்கு இருந்தது. ஏழைகளே இருக்கக்கூடாது அவன் ஆட்சியில் என்று எண்ணினான்.
ஆனால், எங்கள் இருவருக்கு இடையில் இருந்த நட்பை விட, பெறுகி இருந்த ஈகோவும் காழ்ப்புணர்ச்சியும், ஒருவரை மற்றொருவர் தாழ்த்தி, ஒரு நல்லதும் செய்ய விடாமல் செய்தது.
அவரவர் பணபலமும், படை பலமும் பெருக, ஆட்சியில் இருக்கும்போது, லஞ்சமும் கயமையும் பெறுகியது.
மற்ற முக்கிய பிரச்ச்னைகளில் கவனம் செலுத்த முடியாமல், ஆட்சியை பிடிப்பதிலும், காப்பதிலுமே நேரம் விரையமானது.
அவனுக்கு பிறகு வந்தவர்களும், இதைத் தொடர்ந்து, மொத்த கூட்டமும் பொது முன்னேற்றத்திர்க்கு வழி பண்ணாமல், சுய முன்னேற்றமும், தன் சுற்றத்தின் முன்னேற்றமுமே பேண முடிந்தது.

எல்லா நிலைகளிலும் லஞ்சம் பெறுகியது. கட்சிக்கு ஆதாயம் என்பதால், கேள்விகள் பல கேட்கப்படாமல் மௌனமாக நம் தமிழகம் அழிந்து கொண்டு வந்திருக்கிறது.

விவசாயியை எல்லோரும் மறந்தோம். தேர்தல் சமயத்தில் மட்டும், சில சலுகைகள் கொடுத்து ஓட்டு வாங்குவதில் மட்டுமே நம் கவனம் இருந்தது. கொடுத்த சில சலுகைகளும் அவனுக்கு சேர்கிறதா என்று சரி வர கவனிக்காமல், பல குடும்பங்கள் பலியாக காரணமானோம்.

வரிப்பணத்தில் செய்யும் பல வேலையிலும் லஞ்சம் புகுந்து பலருக்கு பெரும் துயர் ஏற்பட வழி வகுத்தது. மழையில் பல் இளிக்கும் சாலை, வெயிலில் தண்ணீர் பஞ்சம், விவசாயிக்கு கிடைக்க வேண்டிய வசதி கிடைக்காதிருத்தல், உணவு/மருந்து பற்றாக்குறை, பேருக்குக் கூட சுகாதார வசதி இல்லாமல் பல இடங்கள், அரசியல் லாபத்துக்காக மூடப்படும் சாதி சண்டைகள், கல்வி கிட்டாத பல குழந்தைகள், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதில், அறிந்தும் அறியாமலும், என் பங்கும் உண்டு.
"

என்று மூச்சு முட்ட கர கரத்த குரலில் பேசினார் கருணாநிதி.

"என்ன சார் அப்பா இப்படி கவுக்கராரு. போற போக்க பாத்தா, எல்லாத்தையும் மக்களுக்கு எழுதி வச்சு எனக்கு துண்டு கொடுத்துடுவார் போல இருக்கே" என்ற ஸ்டாலின், அன்பழகனிடம் "கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க சார் அவர" என்று கூறினார்.

கணேசன் பேச ஆரம்பித்தார் - "நீங்க சொன்னதத்தான் தேர்தல் சமயத்துல நானும் கிராமம் கிராமமா போய் கத்தினேன். ஒரு பயலும் கேட்ட மாதிரி தெரியலையே. திரும்ப உங்களுக்குதான் ஓட்ட போடறான். மயக்கி இல்ல வச்சிருக்கீங்க ரெண்டு பேரும். ரெண்டு டி.வி ஸ்டேஷன் வச்சுக்கிட்டு மக்கள மாத்தி மாத்தி ப்ரெய்ன் வாஷ் இல்ல பண்றீங்க. போதா கொறைக்கு ராமதாஸ் வேற இன்னொரு டி.வி ஆரம்பிச்சிட்டாரு. என்னதான் முடிவு இதுக்கெல்லாம்?"

"கணேசன். நாங்க இவ்ளோ வளரலன்னா இந்நேரம் ராம் டி.வி யோ, கை டி.வி யோ வந்து, என் மொத்த மக்களையும் இல்ல வசியம் பண்ணி அறியாமைல தள்ளி இருக்கும். உக்காருங்க. உக்காருங்க." என்று அன்பழகன் கணேசனை அமரச் சொன்னார்.

"கருணா, ராகு காலம் ஆரம்பிக்கப் போவுது, நேத்து தீட்டின திட்டத்தோட print-out எடுத்து எல்லாருக்கும் கொடுத்து, நம்ப எடுத்த முடிவ சீக்கிரம் சொல்லுப்பா" என்று கருணாநிதியை பார்த்து அன்பழகன் சொன்னார்.

"சொல்றேன்பா. ஸ்டாலின், இந்த பேப்பர எல்லார் கிட்டயும் கொடு. இயற்கை அழைக்கிறது. 1 வேலைய முடிச்சுட்டு வரேன். நீங்களும் ஒரு short-break எடுத்துட்டு சீக்கிரம் வந்துடுங்க. தம்பி விஜய், shooting க்கு கலம்பிடாதப்பா, நமீதாவ வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு வர சொல்லு. முக்கியமான விஷயம் இனிதான் இருக்கு. கவனமா எல்லாரும் கேக்கணும்" என்று உள்ளே சென்றார். கீழே விழுந்த மஞ்சள் துண்டை எடுத்துக் கொண்டு பின்னேயே ஓடினார் தயாநிதி. "Uncle" என்று கத்தியபடி....

..தொடரும்.


பி.கு: எல்லாம் உடான்சே, உடான்சை தவிர வேறொன்றுமில்லை..



.

Tuesday, November 14, 2006

IF YOU ARE ABUSED ON INTERNET

Saw the following 'anonymous' comment on one of the 'problem blogs' today.
Thought some of the useful information will help everyone.

I made some updates to anony's comments. Removed certain individuals names and a groups name to make it GENERIC.

Note: இந்த பதிவுக்கு கசா முசானு வரும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும். நேரம் வீணாக்காதீர்கள்.
அப்படியே, கீழே சொன்ன மாதிரி நடவடிக்கை எடுக்க பிள்ளையார் சுழியும் போடப்படும்.
ஆரோக்கிய சூழலை உருவாக்குவோம்.

நன்றி அனானி!

பி.கு: Cyber Crime police in India: http://www.naavi.org/cl_editorial_04/cyber_Crime_ps.htm

Dear Friends,

My area of interest is cyber crimes and how to prevent it. I have been doing academic research on this subject for few years. Being a Tamil, I also read Tamil on Internet and reading Tamil blogs for few years. I often read postings accusing of abuse/harassment/stalking/identity theft in Tamil Blogs. Though I see everyone complains big time about it, I have not seen anyone taking any concrete actions to prevent it. People should report the abuses to the police and not to the magazines that will make sales out of it.

Cyber Crime Laws are taking shape even in under developed countries for sometime now. A victim needs some time and perseverance to follow through the complaints to get justice. For example, Malaysia has passed cyber crime laws way back in 1999 or so. You could request Malaysian police to track down any cyber crime culprits through the police department of your country. I am sharing some of the trivial information that could be useful to the victims of cyber crimes on Tamil Internet. The following website has excellent material and guidance to the victims of cyber abuses in Tamil Blogs. Please feel free to contact them.

I have also explained in my research papers few times about the nature of abuses that go on in Tamil Web. However, as I am not affected, I could not give any official complaints. I have tracked poli dondu, karuppupaiyan et all for my research work for sometime and have solid information about them. However, authorities cannot take action without complaints from few current USA residents. So, please use the following links to save yourself. If you need any proof on who is Poli Dondu, after giving a written complaint to your local police authorities, give their e-mail and address in this blog. I will send it to the police department directly.

Go To http://www.wiredsafety.org. This site is a treasure to the victims to get justice.

You can report CyberAbuse online here
http://www.wiredsafety.org/911/index.html

This page has a drop down box to choose the type of complaint. Choose the appropriate one and file your grievances under it. Alternatively, you could also e-mail your complaints to cyber911team AT wiredsafety DOT org.

Abuses of Poli Dondu, Tamil Bartender, Special Aappu, Doondu can be reported under CyberStalking (Online Stalking) or Harassment. This can also be additionally reported under Cyber Bullying.

There is also another easy online reporting form available at
https://www.wiredsafety.org/forms/stalking.html

Please mention that you were abused in Tamil Blogs by so and so blogger. Also if you suspect that blog aggregators collect abuses against you in the name of free speech, you could mention their names too here. Not only the blogger, even those who allow comments of abuse and those who collect or reproduce them can come under the purview of justice.

Karuppupaiyan writes hatred against a section of people (called Brahmins). Most of his writings will fall under the purview of Hate Crimes. Many people including scholars from USA comment on his blog appreciating him. You could ask law enforcement to take action on Karuppupaiyan. For example, even if Karuppupaiyan lives outside USA, you could still complain about him in USA. USA authorities will try to track him down. Also they will put a tab on his supporters in USA and watch them.

Similarly, Sundaravadivel's Savilum pizhaikum parpana kutam post would qualify under racial profiling of brahmins. Any profiling is a crime in USA.

It has been clearly established that Karuppupaiyan is poli dondu and complaints were lodged against him in India, Malaysia and USA already. May be law is giving him a long rope now to catch not only him but also his co-conspirators. USA is not India where they dont care much about cyber crimes. USA takes cyber crimes seriously. So, the chances are more that the guilty will be punished if you report to USA agencies.

Get Live Chat Help from a cybercrime expert if you were one of the affected.

If you were stalked, the following page gives self-help about how to handle it:
http://wiredsafety.org/cyberstalking_harassment//stalking_self_help/

If you were affected by Cyber Crimes and want to prevent others from being affected you may also become a volunteer at CyberCrime Team. They welcome volunteers. Become a volunteer and save someone from being abused.

Is there no way that woman can surf safely online? Surely they can.. Wiredsafety says,

"In the early days of the Web, women had to proceed with caution. They were in the minority and were often targeted by cyberstalkers, scam artists and other predators. As women became more familiar with the technology, things began to change. Equality arrived in the guise of women cyberstalking men and each other and joining the ranks of the cyberabusers, not only the victims.

But women are still targeted by sexual and harassing cyberabuses more than their male counterparts. The ratio is about 3:1, three female victims to every male one.

While many safety and privacy tips apply equally to men and women, there are some situations that are unique to women and some tips that apply to their special vulnerabilities. To learn more, visit the UK site. Learn about how one of our volunteers fought back when she was conned by someone posing as a widower.

There is no longer any reason why women can't be as safe online as men. Most of our senior executives here at WiredSafety.org are women, including our founder and executive director, cyberlawyer, Parry Aftab. If you need someone to speak to your community or women's group about women's online issues, let us know. We're happy to help."

So, all women affected by Poli Dondu/others irrespective of the country they live in, please contact wiredsafety. Crimes against women and children are taken seriously.

When you go to wiredsafety, sometimes they will ask you to go to online FBI website or local police department and give a complaint. FBI or police department gets thousands of complaints everyday like this. At the most, they will give you an interview and hear your case. They may not act beyond it. However, if you go to wiredsafety and inform your complaint details, wiredsafety follows up with the police. When wiredsafety follows up, FBI/Police act normallly and do something.

For example, if you suspect someone as supporting or doing abuses, you could even mention in your complaint that you are suspecting that person. Police will not punish you even if its wrong. Even if you dont mention it, they ask you normally whether you have any list of suspects.

Even if you prove to the world the abuses yourself, no one will be caring much. The guilty will get smarter and move on to a different place or under a different name and continue to harass others. So blogs like this post will serve no purpose.

Few months back, a Canadian movie director was refused entry into USA. What did he do. Directed a movie where the USA President was killed. In Tamil blogs, there is open support for terrorism, violence, punishments by terror groups and justifications for the killings of many foreign leaders/diplomats. Those who do write such posts bring a world of harm to themselves without even knowing about it. A person can also report it to wiredsafety as suspicious activity or support for terror. After 9/11, police encourage people to contact them to report suspicious activities.

I strongly advise you all not to take law in your own hands to expose the guilty. Go to the law enforcement authorities. It may take some time and efforts on your side, but when abusers are put behind the bars, there will be none to write in support of them.

Thursday, November 09, 2006

ஜாதிகள் இருக்குமடி பாப்பா...

இணையத்தில் நிலவி வரும் ஜாதி வெறித் 'தாக்குதல்கள்' பெரும் துயரத்தைத் தருகிறது.

ஒரு பக்கம் இவர் அவரை சாடுவதும்; இன்னொரு பக்கம் அவர் இவரை சாடுவதும்; நடுவில் சிலதுகள் என்னடா நடக்குது என்று புரியாமல் வருந்துவதும் தினமும் நடந்தேறுகிறது.

ஊரில் மக்களை ஏய்ப்பவர்கள் பலர் இருக்க இப்படி ஜாதி பற்றி விதண்டாவாதம் பேசி விவாதிப்பது எல்லாம் தேவையா?

அணைந்த பிரச்சனையை (அல்லது அணையும் நிலையில் உள்ள) பிரச்சனையை இணையத்தில் இப்படி அலசி அதை அணையவிடாமல் இருக்க செய்யும் முயற்சி மடத்தனம் இல்லையா?

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் நம் பதிவுகளை படிக்கிறார்கள். உங்கள் வீட்டு பிள்ளை களும் இதில் உண்டு.
உங்கள் பதிவிலிருந்து அவர்கள் தெரிந்து கொள்ளும் பாடம் என்னவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

"டேய் நான் சங்கரன் பையன் டா. நான் கடவுளுக்கு சமம் டா. நீ கீழ் ஜாதி. நீ தீட்டு டா"
"டேய் நான் குப்பனோட பையன் டா. என் குடும்பத்த கஷ்டப்படுத்தின பார்ப்பானை விட மாட்டேண்டா. ஒரு கை பாக்கரேண்டா அவன"
இப்படி இந்த வயதிலிருந்தே அவர்கள் 'தயார்' நிலையில் தான் வளர வேண்டுமா?

சிறு வயதில் ஏற்பட்ட ஜாதிக் கொடுமைகளால் தான், இணையத்தில் ஜாதியை பற்றி பேசி, தங்கள் ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு தொண்டு செய்வதாக சிலர்.
சிலர், நான்தான் பெரியவன் என்ற ரீதியில் மற்றவரை மட்டம் தட்டியும் கிண்டலடித்தும் பொழுதை போக்குகிறார்கள்.
சிலர் 'பார்ப்பனீய' கலாச்சார அடையாளங்களை ஒழித்தால்தான் இரு பக்கமும் ஒன்றாக்க முடியும் என்கிறார்கள்.
பல குழப்பவாதிகள், மனதளவில் அழுக்கை வைத்துக் கொண்டு மிகவும் கேவலமான பதிவுகள் எல்லாம் கொடுக்கிறார்கள்.

எதை சாதிக்க முயல்கிறோம்?

நீங்கள் யார்?
1) ஜாதி வெறி இன்னும் இருக்கு. அதை ஒழிச்சுட்டுதான் மறு வேலை. இணையத்தில் 'உயர்' ஜாதிக்காரன தினமும் திட்டி அதை ஒழிப்பேன்.
2) நான் உயர்ந்த ஜாதி. கீழ் ஜாதி காரன் கீழ தான் இருக்கணும். எனக்கு சமமா அவன் வரக் கூடாது.
3) ஜாதி வெறி இருந்தது. இன்னும் கொஞ்ச இடத்தில் இருக்குது. ஒடுக்கப்பட்டவனுக்கு உண்மையான உதவி நேரிடையாகச் செய்வேன். இணைய தாக்குதல் எல்லாம் waste of time.
4) சும்மா டைம் பாஸுக்கு ஜாதி வெறி இருக்குன்னு பேசறேன். பேசுவதைத் தவிர வேற ஒண்ணும் செய்ய மாட்டேன்.
5) சும்மா டைம் பாஸுக்கு ஜாதி வெறி இல்லன்னு பேசறேன். பேசுவதைத் தவிர வேற ஒண்ணும் செய்ய மாட்டேன்.
6) என் வழி தனி வழி. யாருக்கும் தொல்லை இல்லா வழி.

ஜாதி யை வைத்து ஒடுக்குபவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று கூறுபவர்கள். உங்கள் ஊரிலோ உங்கள் அலுவலகத்திலோ இப்படி 'ஒடுக்கும்' கயவர்களின் பெயர்/முகவரி யை பதியுங்கள்.
என் சொந்த செலவில், அந்த நபருடன் தொடர்பு கொண்டு, அவர்கள் மன ஓட்டத்தை அறிந்து அவர்களை திருந்த என்ன வழி என்று பார்க்கிறேன்.

ஒருவரையாவது ( இன்னும் ஒடுக்கிக் கொண்டிருந்தால்) திருத்தலாமே ?


அதேபோல் இணையத்தில் நான் கூறிய மேலே உள்ள வகையராக்களில் எந்தெந்த பதிவுகள் உள்ளது என்றும் பின்னூடுங்கள். இதை எல்லாம் படித்து, கோர்த்து நமது மந்தையில் உள்ள கருப்பு ஆடுகள் யார் என்று ஒரு black-list பதிவு அடுத்ததாகக் போடுகிறேன்.

திருந்த/திருத்த வேறு என்னதான் வ்ழி? ஒரு பொதுவான OATH ரெடி செய்து எல்லாரையும் எடுக்கச் சொல்லலாமா?

தெளிவாகுங்கள் நண்பர்களே!

வருத்தத்துடன்,
-BadNewsIndia

பி.கு: இணையத்தில் எழுத ஆரம்பித்தது, ஊரில் ரோடு சரி இல்லை, தண்ணி இல்லை, லஞ்சம், ஊழல் இதைப் பற்றி எல்லாம் எழுதத் தான். இங்கே வந்தால், அதை விட பெரிய பிரச்சனையாக ஜாதி பேச்சு பெரிதாக நாறுகிறது. அரசியல்வாதியே பரவால்ல போலருக்கே.
GOOGLE'ல் உலகம் முழுவதும் படம் பிடித்து zoom செய்து பார்க்கும் படி செய்திருக்கிறார்கள் என்று ஒரு நண்பர் சொன்னார்.
ஆவலுடன், அமெரிக்காவையும், ஐரொப்பாவையும் மற்ற நாடுகளையும் கண்டு களித்தோம். அந்த ஊரில் உள்ள வசதிகளும், வாழ்வின் தரமும் உயரத்தில் இருந்து பார்த்தாலே 'பளிச்' என்று தெரிகிறது.
சென்னையையும் அதை சுற்றி உள்ள இடங்களையும் பார்த்த எனக்கு பெறுத்த அதிர்ச்சி. மற்ற நாடுகளில் எல்லாம் சாலைகள் கருப்பாக பார்ப்பதர்க்கு நேர்த்தியாகத் தெரிந்தது.
சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் ஒரு பொட்டு கருப்பு கூட கண்ணுக்கு தெரியவில்லை. சாலையெல்லாம் மண் நிறத்தில் வாயிளித்து பார்க்கும் அவலம் ஊர் முழுவதும்.
வருடா வருடம் கிடைக்கும் MLA யின் 1 கோடியும், MP யின் 2 கோடியும், பல கோடி வரிப் பணமும் எங்கய்யா போவுது ? ஹ்ம்!! இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது. அதை தனியா அலசறேன். இப்பொழுதைக்கு ஜாதி பிரச்சனைக்கு ஒரு முடிவு என்னன்னு பார்ப்போம்.

Wednesday, November 08, 2006

இலவசமாய் தந்துவிடு (கவிதை)

தூக்கம் இல்லை என்றால்
இலவசமாய் கூட பஞ்சணை வேண்டாம்

பசி இல்லை என்றால்
இலவசமாய் கூட உணவு வேண்டாம்

பார்வை இல்லை என்றால்
இலவசமாய் கூட நிறங்கள் வேண்டாம்

பாசம் இல்லை என்றால்
இலவசமாய் கூட சொந்தங்கள் வேண்டாம்

உண்மை இல்லை என்றால்
இலவசமாய் கூட நண்பன் வேண்டாம்

கண்ணே, உன் காதல் இல்லை என்றால்
மரணத்தை தந்து விடு. இலவசமாய்!!!


-BNI

பி.கு: போட்டிக்கு எழுதினது இல்ல. போட்டிகதை இங்கே - லாட்டரி கோவிந்தன் ( தேன்கூடு போட்டிக்கு )

Tuesday, November 07, 2006

லாட்டரி கோவிந்தன் ( தேன்கூடு போட்டிக்கு )


கோவிந்தனுக்கு அவன் கண்ணயே நம்ப முடியல. கைல இருந்த நாயர் கட தினத் தந்தி பேப்பர இன்னொரு தடவ நல்லா பாத்தான். இன்னொரு கைல நேத்து ராத்திரி வாங்கின லாட்டரி சீட்டு.
லாட்டரி சீட்டையும் பேப்பரையும் மாத்தி மாத்தி பாத்தவன் கண்ணு அகலமா தொறந்தது.
"டேய் முருகா. ஜாக்பாட் அடிச்சுடுச்சுடா. 20 லட்சம் ரூபாடா" - கோவிந்தன் கத்தின கத்து தெரு ஓரத்துல இருந்த ஆட்டோ காரனெல்லாம் திரும்பி பாத்தான்.

முருகன் கொஞ்சம் கூட அலட்டிக்காம் "கோவிந்து சும்மா உடான்ஸ் வுடாத. போய் வேலய பாருடா" ன்னு சொன்னான்.

"டேய் நாயே மெய்யாலுமாடா. இத நீயே பாரு" னு சொல்லி பேப்பரையும் சீட்டையும் முருகன் கிட்ட கொடுத்தான்.

முருகன் லாட்டிரி சீட்டையும் பேப்பரையும் மாத்தி மாத்தி பாத்து பேயரஞ்ச மாதிரி அப்படியே நின்னான். "டேய் மாப்ள. அதே நெம்பரு தாண்டா. படுபாவி மச்சந்தாண்டா உனக்கு. ஜாக்பாட்ரா. 20 லட்சம் டா.", கத்தினான் முருகன்.

"ஹி ஹி ஹி" கோவிந்தனுக்கு சந்தோஷத்துல தல கால் புரீல. கத்தி சிரிச்சிட்டே இருந்தான். மூச்சு முட்டிச்சு.

"முருகா 20 லட்சம் டா, இப்ப என்னடா பண்றது" - முருகன பாத்து கேட்டான்.

"எங்கடா வாங்கின சீட்ட. மொதல்ல அந்த சீட்டை டவுசர்ல பத்திரமா வை. அப்பால அந்த கடைல போயி காசு எங்க வாங்கரதுன்னு கேக்கலாம்" - முருகன் மூச்சு விடாம பேசிட்டே இருந்தான்.

"ஸ்கூல் பக்கத்துல நம்ம மொதலியார் கடைல தான் வாங்குனேன். வாங்கும் போதே அந்த ஆளு சண்ட வேற போட்டான். இது வரைக்கும் இருக்கர கடன செட்டில் பண்ணு கோவிந்தானு. நான் தான் வழக்கம் போல எஸ்கேப் ஆயிட்டேன்" மூச்சு முட்ட முட்ட கத்திப் பேசினான் கோவிந்தன்.

"என்ன மறந்துடாத கோவிந்தா" - முருகன் இளிச்ச வாயோட சொன்னான்.

"அட நாயே. உன்ன எப்படிடா மறப்பேன். உனக்கும் உன் தங்கச்சிக்கும், ஆளுக்கு ஒரு லட்சம் தாரேன். கால் டாக்ஸி வாங்கி ஜமாய் டா முருகா" - கோவிந்தன் சட்டுனு சொன்னத கேட்டு முருகன் கண்ணுல தண்ணி விந்திடுச்சு. கோவிந்தன அப்படியே தோள்ள தூக்கி ஒக்கார வச்சான் முருகன்.

ரெண்டு பேரும் மொதலியார் கடய பாத்து நடக்க ஆரம்பிச்சாங்க.

----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0

கோவிந்தனும் முருகனும் சின்ன வயசுலேர்ந்தே பழக்கம். ரெண்டு பேரும் செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்ட் கிட்ட இருக்கர ஒரு சேரிலதான் இருக்காங்க.

கோவிந்தனுக்கு கல்யாணம் ஆயி நாலு வருஷத்துலயே பொண்டாட்டி மஞ்சக் காமால வந்து செத்து போயிடுச்சு.
ராமு, வள்ளி னு 11 வயசு பையனும், 7 வயசு பொண்ணும் இருக்கு.

அம்மா இல்லாத்ததால ரொம்ப பாசமா வளப்பான் பசங்கள. அடிக்க மாட்டான்.

கோவிந்தனுக்கு சரியான வேல கெடயாது. மூணாம் கிளாஸ் மட்டும் படிச்சிருக்கான்.
குப்பைத் தொட்டில இருக்கர ப்ளாஸ்டிக், இரும்பு, பாட்டில் சாமான பிரிச்சு எடுத்து ஒரு கோணிப் பைல போட்டு பழைய பேப்பர் கடை வச்சிருக்கர ரங்கப்பன் கிட்ட விப்பான்.
ரங்கப்பன் கோணில எவ்ளோ கனம் இருந்தாலும், ஒரு நாளைக்கு 14 ரூபாய்க்கு மேல கொடுக்க மாட்டாரு.

மழை காலத்துல 14 ரூபாயும் கெடைக்காது. சாப்பாட்டுக்கே கஷ்டம்தான்.

மழை காலத்துல மத்த என்ன வேல கெடைக்குதோ அத செய்வான்.

முக்கியமா, பக்கத்து ஊர்ல இருக்கர வீடுகள்ல தோட்ட வேல, தண்ணி எறைக்கரது இந்த மாதிரி வேலையும் செய்வான். ஆனா, இதெல்லாம் செஞ்சா 10 ரூபாதான் கொடுப்பாங்க.

மூத்த பையன் ராமுவ பள்ளிக்கூடம் அனுப்பணும்னு ரொம்ப நாள் ஆச. ஆனா வசதி தான் இல்ல. வள்ளியயாவது ஒழுங்கா சாப்புட வச்சு படிக்க அனுப்பணும்னு, ராமு கிட்டயும் ஒரு கோணிப்பய்ய கொடுத்து தொழில் கத்துக் கொடுத்துட்டான்.
ராமுவும், வீட்டு நெலம தெரிஞ்ச நல்ல பையன். தெனமும் கெடைக்கர 10 ரூபாய கோவிந்தன் கிட்ட கொடுத்திருவான். அவனுக்காக ஒண்ணும் வாங்கிக்க மாட்டான்.

அப்பனும் புள்ளயும் சேந்து வள்ளிய பள்ளிக்கூடத்துல சேத்து விட்டு அவளுக்கு வேண்டியதேல்லாம் கஷ்டப்பட்டு செஞ்சாங்க.

ஒரு நாள் ராமு கோவிந்தன் கிட்ட வந்து "யப்பா, கண்ணன் இருக்கான்ல, அவன் ஒரு நாளைக்கு 40 ரூபா சம்பாதிக்ரான். நம்ம ரத்னம் மாமா இருக்காருல்ல, அவரு கூட போயி சாக்கடையெல்லாம் கழுவி விட்டா 40 ரூவா தருவாராம். மதியானம் சாப்பாடும் வாங்கி கொடுத்துருவாராம். நானும் போட்டாப்ப?" என்றான்.

"டேய். அதெல்லாம் வேணாம்டா. இந்த வேல பாரு போதும். எனக்கு நல்ல வேல கெடச்சா நீயும் பள்ளி கூடம் போவணும். சாக்கட அள்ராராம் சாக்கட. போடா" கோவத்துடன் கத்திவிட்டான் கோவிந்தன்.

மறு நாளே, ரத்னம் மாமாவை பார்த்து, "சாக்கடை கழுவுர வேலைக்கு நானே வரேன்னு" சொல்லி கோவிந்தனே போய் கேட்டுப் பாத்தான். என்ன இருந்தாலும் 40 ரூபா தெனமும் கடச்சா பசியார பசங்க சாப்பிடலாமே. மெதுவா வேற நல்ல வேல பாத்து அப்பறம் மாறிக்கலாம் னு மனசுல கணக்கு போட்டான்.

முருகன் லாரில மணல் லோட் அள்ளிப்போடர வேல. கோவிந்தனுக்கும் அந்த வேல ஏற்பாடு பண்ண ரொம்ப நாளா ட்ரை பண்றான். மொதலாளி படிய மாட்றாரு.

சாக்கட கழுவரது ஒண்ணும் அவ்ளோ கஷ்டமா தெரீல ஆரம்பத்துல. ஆனா, அடப்பு ஜாஸ்தி இருந்தா சாக்கடேல கால விட்டு கொத்தி விடணும். செல நாள் கால்ல புண்ணு வந்துடும். நாத்தம் கொடல பொரட்டும். சாப்பாடு கூட எறங்காது.

பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கர சாக்கடை வாரத்துக்கு ஒரு தடவ அடச்சுக்கும். பஸ்க்கு நிக்கரவன் எல்லாம் குப்பைய கரெக்டா சாக்கடைல போட்டுருவானுங்க. தண்ணி போகாம அப்படியே நிக்கும். குச்சி எல்லாம் விட்டு குத்தினாலும் தண்ணி போவாது.
வேற வழியே இல்லாம என்னா பண்றதுன்னு யோசிச்சுனு இருந்தான் ஒரு நாள்.

"கோவிந்தா என்னடா நோவாம குத்தினு இருக்கர. மூலைல man-hole இருக்கு பாரு. அந்த மூடிய பொரட்டி போட்டு மெதுவா உள்ள எறங்கு. உள்ள கை விட்டு துழாவி அடச்சுக்கினு இருக்கர பேப்பரையெல்லம் எடுத்து வெளில போடு சரியாயிடும்" - ரத்னம் மாமா சூப்பரா ஐடியா கொடுத்தாரு.
உள்ள எறங்கி கடல்ல முத்து குளிக்கர மாதிரி முங்கி முங்கி குப்பய எடுத்து போட்டான் கோவிந்தன்.
அடச்ச சாக்கடையும் ஓடிச்சு, அன்னிலேர்ந்து அவனுக்கு சாப்பிடர ஆசையும் ஒடிச்சு. அன்னிக்கு பூரா வாந்தி எடுத்து படுத்துட்டான்.

ஏதோ ப்ரொமோஷன் கொடுத்த மாதிரி, அன்னிலேருந்து எங்க சாக்கட அடச்சாலும் "கூப்புடு கோவிந்தன" என்று ரத்னம் மாமா கத்துவாரு.
முத்து குளிக்கும் நாள் மட்டும் 60 ரூபா கெடைக்கும். கவுர்மெண்டுல 100 ரூபா கொடுப்பாங்களாம், ஆனா 40 ரூபாய ரத்னம் மாமா அமுக்கிடராருனு யாரோ பேசும் போது கேட்டான் கோவிந்தன். ஆனா அத பத்தி அவன் ரத்னம் மாமா கிட்ட ஒண்ணும் கேட்டுக்கல.

ராமு கிட்ட இந்த வேல செய்றத பத்தி சொல்லல. வள்ளி மட்டும், "யப்பா என்னப்பா உன் மேல இப்படி நாத்தம் அடிக்குது. எங்க பொரண்டுட்டு வர" னு கேப்பா.
"வேர்வ நாறுது, நான் போயி குளிச்சுட்டு வரேன்னு" வெளில கெளம்பிடுவான்.

"ராமுவ இந்த வேலயெல்லாம் செய்ய விடக்கூடாது. நல்லா படிக்க வெக்கணும். பாவம் புள்ள நம்மள மாதிரி ஆயிடக் கூடாது" னு ஒப்பாரி வச்சான் முருகன் கிட்ட.

வேற நல்ல வேலை ஒண்ணும் கெடைக்காததால மொதலியார் கடைல தெனம் ரெண்டு ரூவா கொடுத்து லாட்டரி வாங்குவான்.
மொதலியார் ஒவ்வொரு தடவயும் "டேய் லாட்டரி கோவிந்தா, இருக்கர பாக்கிய கொடுத்துட்டு அப்பரம் லாட்டரி வாங்குவியோ, வெஷத்த வாங்குவியோ ஏதாவது பண்ணு. இனிமே இந்த பக்கம் வராதன்னு" சொல்லுவார்.

கோவிந்தனும் சிரிச்சிட்டே "நாளிக்கு குடுத்துடரேன் மொதலியாரு. சீட்ட குடு நீ. நாளிக்கே பம்பர் அடிச்சுதுன்னா மொதல்ல உன் பாக்கி கொடுத்துட்டு தான் மறு வேல" - சொல்லிட்டு சீட்ட வாங்கிட்டு ஒடிடுவான்.

லாட்டரி வாங்க ஆரம்பித்து 2 வருஷம் ஆச்சு. அதுல விட்ட காச வச்சு புது சொக்காவாவது வள்ளிக்கும் ராமுவுக்கும் வாங்கி கொடுத்துருக்கலாம்னு அப்பப்ப தோணும்.
ஆனாலும், விக்ரமாதித்தன் மாதிரி தெனமும் லாட்டரி வாங்கரது ஒரு பழக்கமாயிடுச்சு.

----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0

மொதலியார் கடைக்கு நடக்க ஆரம்பிச்ச கோவிந்தன், "டேய் முருகா, 20 லட்சம்னா எவ்ளோ நூறு ரூபாடா? என்ன வேணா வாங்கலாம்ல?" - முருகனை பாத்து கேட்டான்.

"கோவிந்தா. நல்லா கேட்டடா. நம்ம போஸ் ஒரு பழைய ஆட்டோ வாங்குணானுல்ல. அது 2 லட்சம்தான். அத மாதிரி 10 வாங்கலாம்டா. ஆட்டோ மொதலாளி ஆயிடலாம்டா நீ. ஹ்ம்ம் 18 வாங்கலாம். எனக்குதான் 2 லட்சம் தரேன்னியே" - அசடு வழிஞ்சான் முருகன்.

"அடேங்கப்பா. இனி ஒரு கவலயும் இல்லங்கர. புள்ளையார் காப்பாத்திட்டான். டேய், உனக்கு 2 லட்சம் என்னடா என்ன வேணாலும் தரேன். ராமு, வள்ளி, உன் பசங்க எல்லாத்தையும் நல்ல ஸ்கூல்ல சேக்கணும்டா. என்னா சொல்ற" - இது கோவிந்தன் சொன்னது.
முருகனுக்கும் இதக் கேட்டு சந்தோஷம் - "பண்ணிடலாம்டா கோவிந்தா" சொல்லிட்டே நடந்தான்.

----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0

மொதலியார் வழக்கம் போல் ஒரு பழைய வேட்டியில் இருந்தார். சட்டை அணியாமல் தொப்பையை தடவியபடி "என்னடா கோவிந்தா. காலைலியே வந்துட்ட. துட்டு கொண்டாந்தியா" - வழக்கம் போல கேட்டாரு.

"மொதலியார், யார பாத்து இன்னா கேக்கர. நம்ம கோவிந்தன் நேத்து உன்னாண்ட வாங்கின லாட்டரி சீட்டுக்கு 20 லட்சம் விழுந்திருக்கு. கொஞ்சம் சரி பாத்து, எங்க காச வாங்கணும்னு சொல்லு" - மிரட்டல் கொரல்ல முருகன் கேட்டான்.

இத கேட்ட மொதலியாரும் நம்ப முடியாம, கோவிந்தன் குடுத்த சீட்டையும் தினத் தந்தியையும் மாத்தி மாத்தி பாத்துட்டு கத்தினாரு - "கோவிந்தா அதிர்ஷ்டக்காரண்டா நீ. நெஜமாவே 20 லட்சம் அடிச்சிருக்குடா."

கோவிந்தனுக்கு இத கேட்டதும் இன்னும் சந்தோஷம் ஜாஸ்தி ஆயிடுச்சு. "மொதலியார் காச எங்க போயி வாங்கணும். சீக்கரம் சொல்லுங்க. பணத்த வாங்கிட்டு மொதல்ல பசங்கள்ட போயி விஷயத்த சொல்லணும்" - இப்படி சொல்லிக்கொண்டே போனவன பாத்து, மொதலியார் "அவசரப் படாத, மொதல்ல லாட்டரி கம்பெனிக்கு போன் போட்டு பேசிடரேன்" சொல்லிக்கிட்டே போன் போட்டு மொதலியார் விவரத்த கேட்டாரு.

போன் வச்சுட்டு "கோவிந்தா. சீட்ட கொண்டு போய் பக்கத்துல இந்தியன் பாங்க் இருக்குல்ல அங்க குடுத்தா, பிடித்தமெல்லாம் போக 18 லட்சத்தி 40 ஆயிரம் ரூபா கொடுபாங்களாம். எனக்கும் 20 ஆயிரம் ரூபாய், கமிஷன் இருக்காம். அத தபால்ல அப்பறமா அனுப்புவாங்களாம். நானும் உன் கூட வரேன். வா பாங்குக்கு போயிட்டு காச வாங்கி, உன் பேர்ல ஒரு சேமிப்பு கணக்கும் ஆரம்பிச்சு அதுல காச போட்டுருவோம். கையில அவ்ளோ காசு இருந்தா நல்லதுல்ல" - தனக்கு காசு வரப்போவுது னு தெரிஞ்ச குஷீல மொதலியாரும் உதவரதுக்கு துடிச்சாரு.

கடையை சாத்தி விட்டு, பக்கத்துல இருந்த ஆட்டோவ மொதலியார் கூப்பிட்டு "பாங்க் போணும்பா" என்றார். கோவிந்தன், முருகன் ஏற வழிவிட்டு இவர் கடைசியா ஏறினார்.

----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0

வங்கிக்குள் செல்வதர்க்குள் சேதி பரவி கூட்டம் சேர்ந்துடுச்சு. "கோவிந்தா மச்சம் தாண்டா உனக்கு" இப்படி சொல்லி எல்லாரும் கை கொடுத்தாங்க. முதுகுல தட்டிக் கொடுத்தாங்க.

ரத்தினம் மாமா, "லாட்டரி கோவிந்தா. நம்பள எல்லாம் மறந்துடாதப்பா" - இப்படிச் சொல்லி கோவிந்தனை கட்டிப்புடிச்சாரு.

முருகன், கும்பலுக்கு நடூல வழி பண்ணி, கோவிந்தன பாங்க் மானேஜர் கிட்ட கூட்டிட்டு போனான்.
மொதலியாரும் எழுத வேண்டியத எழுதி கொடுத்து லாட்டரி பணத்தை வாங்கி கோவிந்தன் பேரில் சேமிப்பு கணக்கு ஆரம்பிச்சு கொடுத்தாரு.
மானேஜர் "இப்ப செலவுக்கு எவ்ளோ வேணும் சார்" என்று பவ்யமா கேட்டாரு.

"1000 ரூபா கொடுங்க ஐயா" - வெளில கேக்காத மாதிரி கோவிந்தன் சொன்னான்.

----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0

1000 ரூபாயுடன், கோவிந்தனும், முருகனும் வெளியில் வந்தார்கள்.

"மாப்ள, மொதல்ல கடைக்கு போயி, பசங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கறேன். வள்ளிக்கு நாயர் கடை போண்டானா உசுரு. ராமு பஸ் ஸ்டாண்ட் கிட்ட தான் எங்கயாவது குப்ப பொறுக்கிட்டிருப்பான், நீ போயி அவன தேடி வூட்டுக்கு கூட்டியாந்துடு. நானும் வீட்டுக்கு வந்துடறேன்" - கோவிந்தன் மட மடனு பேசிட்டே போனான்.
"டேய், இந்தா 200 ரூபா. அப்படியே உன் பசங்களுக்கு ஏதாவது வாங்கிட்டு போ" முருகன் கிட்ட 200 ரூபாய நீட்டி கோவிந்தன் சொன்னான்.

----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0

ஓட்டமும் நடயுமாக நாயர் கடைக்கு வந்து 10 போண்டா வாங்கினான்.

ராமைய்யா கடையில், வள்ளிக்கும், ராமுவுக்கும் புது டவுசர், பாவாடை வாங்கினான். இது நாள் வரை ரத்னம் மாமா கொடுத்த பழையது மட்டுமே போட்டுக் கொண்டிருக்கும் ராமுவையும் வள்ளியையும் நினைத்து ஒரு கணம் கண்ணில் நீர் கசிந்தது அவனுக்கு. "இனி ஒரு கஷ்டமும் இல்ல". இப்படி மனசுல நெனச்சுக்கிட்டே ராமைய்யா கிட்ட 150 ரூபா எடுத்து கொடுத்தான்.
லாட்டரி விஷய்ம் தெரிஞ்ச ராமைய்யாவும் "என்னடா கோவிந்தா. உனக்கு ஒண்ணும் வாங்கலியா" ன்னு கேட்டாரு.
"ஓ. எனக்கு அப்பறம் வாங்கிக்கறேன். மொதல்ல பசங்கள பாக்கணும்" என்று ஓட ஆரம்பிச்சான்.
வழியில் பலூன்காரன் கிட்ட 10 பலூனும், கோமதி பாட்டிகிட்ட இரண்டு ஐஸ், தெரு ஓரத்தில் பம்பரம் விற்பவனிடம் பம்பரமும் வாங்கி மூச்சு வாங்க ஓடினான்.

வள்ளி இரண்டு வாரத்துக்கு முன்னால, செருப்பு வேணும்னு கேட்டுச்சு. ஒரு செருப்பு 35 ரூபா கொடுத்த வாங்க முடில. அது ஞாபகம் வந்த ஒடன்ன, செருப்பு கடைய பாத்து அவசரமா ஓடினான். 100 ரூபாய்க்கு அழகா ஒரு செருப்பு வாங்கினான்.
ராமுக்கு அப்படியே ஒண்ணு வாங்கினான்.

எல்லாத்தையும் எடுத்துட்டு வீட்டுக்கு வந்த கோவிந்தன "யப்பா 20 லட்சமாப்பா?. எனக்கு என்னப்பா வாங்கின?" - ஆர்பாட்டம் பண்ணாங்க ராமுவும், வள்ளியும்.

ரெண்டு பேரையும் ரெண்டு தோள்ள தூக்கி வச்சு ஆடினான் கோவிந்தன்.

அங்க இருந்த முருகன் கிட்ட டவுஸர்ல இருந்த மிச்ச ரூபாயில் 300 ஐ எடுத்து கொடுத்திட்டு, "முருகா கடைக்கு போயி உன் பசங்களுக்கும் புது சொக்கா வாங்கி கொடு. கறிகாய் வாங்கி உன் பொண்டாட்டிய சமச்சு போட சொல்லு. நானும் என் பசங்களோட, பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கர ஓட்டலுக்கு போயி சாப்பிடப் போறேன். நாளைக்கு காலேல வந்துடு. நாளிக்கு பாங்க் போய் உனக்கு 2 லட்சம் எடுத்து தரேன்" என்றான்.

முருகன் "ஓ" னு அழ ஆரம்பிச்சுட்டான் இத கேட்ட ஒடன. "கோவிந்தா. சும்மா வெளயாட்டுக்கு தான் சொல்றேன்னு நெனச்சேண்டா" என்றான்.

"டேய் முருகா. நீ எனக்கு பண்ண ஒத்தாசிக்கெல்லாம் முன்னாடி, 2 லட்சம் எல்லாம் என்னடா பெரிய பணம்" என்று கோவிந்தனும் அழுதான்.

முருகன் போனதும், "ராமு, வள்ளி, ரெண்டு பேரும் சட்டுனு குளிச்சுட்டு புது சொக்கா போட்டுக்கங்க. சாப்பிட ஹோட்டலுக்கு போலாம்" என்றான்.

இத கேட்டது ரெண்டு பேரும் சந்தோஷமா "டுர்ர்ர்ர்ர்" னு கற்பனை கார் ஓட்டி தெரு ஓர குழாய்க்கு குளிக்க ஓடினார்கள்.

திடீர் சந்தோஷம் தந்த பதட்டம் இப்பதான் கொஞ்சம் கம்மியாச்சு கோவிந்தனுக்கு.

"ஹப்பா, ஒரு நாள்ள என்னவெல்லாம் நடக்குது. புள்ளயாரே காப்பாத்திட்டப்பா" - இப்படி மனசுக்குள்ள நெனச்சு வீட்டுக்குள்ள இருந்த புள்ளயார் படத்தில் இருந்து விபூதி எடுத்து பட்டயாக பூசிக்கொண்டான்.

குடிசைக்கு வெளியே வந்தான். வெளீல சூரியன் மறைய ஆரம்பிச்சு இருந்தது. அழகா தங்க நெறத்துல வானம் தக தகனு இருந்தது.

கைத்துக் கட்டில்ல மெதுவா படுத்தான். காலேலேருந்து ஓடி ஆடின களைப்புல, கண்ணு ஒடனே சொருகி தூக்கம் வந்துடுச்சு.
பசங்க வரதுக்குள்ள குட்டி தூக்கம் போடலாம்னு தூங்கினான்.

"கோவிந்தா. டேய் கோவிந்தா. எலேய் எழுந்துருடா டேய்" என்று அலறிய குரல் கேட்டு பதறி எழுந்தான்.

"டேய் பரதேசி. இன்னும் என்னடா தூங்கிக் கிட்டு இருக்கர ராஜா மாதிரி. காத்தால 8 மணி ஆச்சு. இன்னும் ஆள காணலியேனு பாத்தா, ஐயா இங்க தூங்கிக்கினு இருக்காரு. தூ. எழுந்து பொழப்ப பாருடா" என்று ரத்னம் மாமா சரமாரியா திட்டினாரு.
ரத்னம் மாமா ஓட்டிட்டு வந்த குப்பை வண்டியின் நாத்தம் கொடலை பொரட்டியது.

வீட்டுக்குள்ளே இருந்து வெளியில் வந்த ராமு, சுவத்துல மாட்டி இருந்த கோணிப்பை எடுத்து தோள்ள போட்டு "யப்பா. போய்டு வரேன். இன்னிக்கு பஸ் ஸ்டாண்ட் கிட்ட தான் சுத்திக்கினு இருப்பேன். இன்னிக்காவது லாட்டரி வாங்காம, வள்ளி பொண்ணுக்கு செருப்பு வாங்கினு வாப்பா" னு சொல்லிட்டு 'வேலைக்கு' கெளம்பிட்டான் ராமு.

"யப்பா, இன்னிக்காவது செருப்பு வாங்கிட்டு வாப்பா" என்று உள்ளே இருந்த கிழிந்த பாவாடையுடன் வள்ளி வந்தா.

வள்ளி யை பாத்ததும்தான் நிதர்ஸனம் உரைத்தது கோவிந்தனுக்கு. லாட்டரி, 20 லட்சம், புது சொக்கா, வள்ளிக்கு வாங்கிய செருப்பு, எல்லாம் வெறும் கனவு என்ற உண்மை புரிந்தது.

கைகள் நடுங்கியது.

"ஐயோ எல்லாமே கனவா. ஆண்டவா" என்று கூறிக் கொண்டு தலையில் அடித்து அழத் தொடங்கினான்.

ஒன்றும் புரியாத வள்ளி, சற்று தள்ளி நின்று பயத்துடன் அவனுடன் சேர்ந்து அழுதாள்.

ரத்தினம் மாமா குப்பை வண்டியுடன் காத்துக் கொண்டிருந்தார்.


----- 0 - முற்றும் - 0 ----- 0 ----- 0 ----- 0

-BadNewsIndia

Wednesday, November 01, 2006

20. என்னை போன்ற பலரை உந்திய பாரதியார் கவிதை...



பாரதியார் போல் இனி ஒரு கவிஞன் வரப் போவதில்லை.

அவன் புலமை ஆகட்டும், புரட்சிக் கருத்துக்கள் ஆகட்டும், தன்நலம் தேடாத மனிதம் ஆகட்டும் - அவனை மிஞ்ச ஒரு மனிதன் இருந்ததும் இல்லை, இனி இருக்கப் போவதும் இல்லை.

ஒவ்வொரு கவிதையும் படிப்பவர் உள்ளத்திலே ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணும்.

இனிய நடை, தேர்ந்த கற்பனை, கூரிய கருத்து, நல்ல சிந்தனை - இதை எல்லாம் போட்டு, கலந்து கொடுத்த ஒவ்வொரு படைப்பும் திகட்டாத இன்பம்.

பாரதியார் கவிதைகளை ஆராய/விமர்சிக்க எனக்குத் தகுதி கிடையாது.

அவன் எழுதிய இந்தக் கவிதை என்னை போலே பலருக்கு ஒரு உந்துதல் கொடுத்து, routine-life ல் இருந்து சற்றே வெளியில் வந்து பொது நல சிந்தனை வேண்டும் என்று நினைவு படுத்தியது. ஏதாவது உருப்படியா செய்யலாமே என்று எண்ண வைத்தது.

அந்த அற்புதப் படைப்பு இதோ.

------ . ------ . ------ . ------ . ------ . ------
தேடிச் சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பம் மிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப் பருவமெய்தி
கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ
...
இனி புதியதோர் உயிர் கொண்டு
மதி தன்னை தெளிவாக்கி
என்றும் சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய் !!!
என்றும் சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய் !!!
------ . ------ . ------ . ------ . ------ . ------

உங்களையும் உந்தி இருக்கும் என்று நினைக்கிறேன் (ஏற்கனவே உந்தப்படாமல் இருந்திருந்தால்).

இதை ஒரு படத்தில் திரு. கமல்ஹாசன் படிப்பது போல் ஒரு காட்சி வரும். மிக அருமை.

எல்லா பாரதியார் கவிதைகளும் ஒலித் தட்டுகளாக வந்தால் நன்றாக இருக்கும். பாடல்களாக இல்லாமல், பாரதியின் மன ஓட்டம் என்னவாயிருந்திருக்கும் என்று உணர்ந்து அந்த கவிதைகளை கமல் மாதிரி ஆட்கள் யாராவது வாசித்துப் பதிய வேண்டும்.

பாரதிராஜா, கமல், மனோகர்,ஹெரான் ராமசுவாமி, கீரன், வைரமுத்து - இவர்களில் யாராவது இதை செய்தால் நன்றாய் இருக்கும்/இருந்திருக்கும். ( ஹெரான், கீரன், மனொகர் இப்பொழுது இல்லை)

வேறு யார் படித்தால் நல்லா இருக்கும்?

எஸ்.கே மாதிரி யாராவது ஏற்பாடு பண்ணுங்களேன் சார் :)