Saturday, March 24, 2007

செய்தி - தெய்வம் நின்று கொல்லும் - 2

மஞ்சுநாத் என்று ஒரு இளைஞர் இருந்தார்.
IIT, IIM எல்லாம் படித்துவிட்டு $ சம்பாதிக்க வெளிநாடுகளுக்கு செல்லாமல், உள்ளூரிலேயே வேலைக்கு சேர்ந்தார்.
Indian Oil Cororation (IOC) நிறுவனத்தில் விற்பனைத் துறையில் சேர்ந்தார்.

உத்தர் ப்ரதேசத்தில் உள்ள ஒரு பெட்ரோல் வினியோக நிலையத்தில், கலப்படம் செய்து டீஸல் விற்கப்படுவதை கண்டித்து, கடைக்கு ஸீல் வைத்துவிடுவேன் என்று எச்சரித்தாராம்.

லஞ்சம் வாங்கிக் கொண்டு, எவன் எக்கேடு கெட்டால் என்ன என்று நினைத்து அடுத்த வேலையை பார்க்கத் தொடங்காமல், தன் கடமையை நேர்மையாக செய்தவர் மஞ்சுநாத்.

ஆத்திரம் அடைந்த கடையின் முதலாளி Monu Mittal அடியாட்களுடன், மஞ்சுநாத்தை வெட்டிக் கொன்றுவிட்டான்.
November 2005 நடந்த இந்த நிகழ்ச்சி பெரிய துயரத்தைத் தந்தது.

இந்த வழக்கில் Monu Mittal உள்பட 8 ஆட்களுக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

மகனை இழந்து தவிக்கும் மஞ்சுநாத்தின் பெற்றோருக்கு, இது ஆறுதல் தரும் செய்தி.

மேலும் விவரங்கள் இங்கே இருக்கிறது - Manjunath

கொலைகாரர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது. Monu Mittal gets death sentence, while others receive life sentencing.
விவரங்கள் இங்கே - Click here.

2 comments:

said...

http://www.hindu.com/2007/03/27/stories/2007032707751200.htm

Anonymous said...

thanks for the good news