Friday, March 30, 2007

Happy April 1st

பிற்படுத்தப்பட்டோரின் முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்டது இட ஒதுக்கீட்டுத் திட்டம்.

பிற்படுத்தப்பட்டோர் இந்த திட்டத்தினால் முன்னேறிய பிறகு, இட ஒதுக்கீட்டின் அவசியம் இருக்காது என்று இதை நிறுவும் போதே அன்றைய தலைவர்கள் கூறியிருந்தார்கள்.

ஆனால், ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் கட்சிகள் இடஒதுக்கீட்டை, துருப்புச் சீட்டாக பயன் படுத்தி, இதை அணையா விளக்காக காத்து வருகிறார்கள்.

தேர்தலில் ஓட்டு சேகரிக்கும் தந்திரமாக இதை பயன் படுத்த துவங்கியதால், அதற்க்கு பங்கம் விளைவிக்கும் எல்லா ஏற்பாட்டையும், இரும்பு கரம் கொண்டும், குள்ள நரி வித்தைகள் கொண்டும் தடுத்து வருகிறார்கள் நம் இன்றைய தலைவர்கள்.

100 குழந்தைகள் படிக்கும் பள்ளியில், 80 நோஞ்சான் குழந்தைகளும் 20 புஷ்டியான குழந்தைகளும் இருந்தார்கள்.
இந்த 80 நோஞ்சான் குழந்தைகளுக்கு புஷ்டி ஆகாரம் கொடுத்தால் நன்றாய் படித்து முன்னுக்கு வருவார்கள் என்று பல வருடங்களுக்கு முன் சட்டம் தீட்டி செயல் படுத்தினார்கள்.
இந்த நல்ல திட்டத்தினால் 80 குழந்தைகளும் புஷ்டி ஆனார்கள், முன்னேறினார்கள்.

ப‌ள்ளியில் மேலும் 100 குழந்தைக‌ள் சேர்ந்த‌ன‌ர். இதிலும் 80 நோஞ்சான், 20 புஷ்டி.
இப்பொழுது, ஒட்டு மொத்த‌மாக‌ 120 புஷ்டியும், 80 நோஞ்சான் பிள்ளைக‌ளும் இருந்த‌ன‌ர்.
இதில், புஷ்டி ஆகார‌ம் 80 நோஞ்சான் பிள்ளைக‌ளுக்கு வ‌ழ‌ங்கினால், ஏற்க‌ன‌வே உண்டு கொழுத்த‌ 80 பிள்ளைக‌ளும் இதில் ப‌ங்குக்கு வ‌ருகிறார்க‌ள்.
குழ‌ம்பிய‌ நிர்வாக‌மும் இருக்கும் 80 உண‌வு பொட்ட‌ள‌த்தை 160 குழந்தைக‌ளுக்கு பிரித்து வ‌ழங்கிய‌து.
ஏற்க‌ன‌வே புஷ்டியாகிய‌ பிள்ளைக்கு பெரிய‌ பாதிப்பில்லை. புதிதாக‌ சேர்ந்த‌ நோஞ்சான் பிள்ளை பாவ‌ம், புஷ்டியாக‌ வ‌ழியே இல்லாம‌ல் நலின்தே கிட‌க்கிற‌து.

ஏற்க‌ன‌வே புஷ்டியாக‌ உள்ள‌வ‌ர்க‌ளையும், ச‌த்துண‌வு வ‌ழ‌ங்கி புஷ்டி ஆக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளையும், ச‌ரியாக‌ பிரித்து அறிந்து உண்மையான‌ நோஞ்சான் பிள்ளைக்கு ச‌த்துண‌வு வ‌ழ‌ங்க‌ வேண்டும்.

இதைச் ச‌ரியாக‌ செய்யத் தெரியாம‌ல் இருப்ப‌து ப‌ள்ளிக்கூட‌த்தின் நிர்வாக‌க் கோளாறு.

பிற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ வ‌குப்பை சேர்ந்த‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் முன்னேறி இருக்கிறார்கள். (கலாம், நாராயணன் உள்பட) இந்த‌ முன்னேறிய‌வ‌ர்களில் பலர், நாம் தான் முன்னேறிவிட்டோமே, இனி இந்த‌ இட‌ ஒதுக்கீட்டை ந‌ம் பிள்ளைக‌ளுக்கு ப‌ய‌ன் ப‌டுத்தாம‌ல், உண்மையிலேயே ந‌லிந்த‌வ‌ர்க‌ளுக்கு வ‌ழி விடுவோம் என்று தானாய் எண்ணி‌ வ‌ழி விட‌ மாட்டார்க‌ள்.

பிற்ப‌டுத்த‌ப்ப‌ட்டோரில் முன்னேறிய‌வ‌ர்க‌ள், முன்னேறாத‌வ‌ர்க‌ள் யாரென க‌ண்ட‌றிந்து உண்மையில் வாடுப‌வ‌னுக்கு ச‌லுகைக‌ள் கிடைக்க‌ச் செய்வ‌து அர‌சின் க‌ட‌மை அல்ல‌வா?

சாதி அடிப்படையில் வழங்கி வரும் சலுகைகள், பொருளாதார ரீதியில் வழங்கச் செய்தல் எப்படித் தவறாகும்?

அப்படி வழங்கினால் தானே, இடஒதுக்கீட்டின் உண்மைப் பலன் கிட்டும்?

இந்தியா மாதிரி ஒரு பெரிய நாட்டில், பொருளாதார ரீதியாக மக்களை அளவெடுத்து, வரிசை படுத்துவது கடினம் தான்.

கடினம் என்பதால், ஒரு செயலை செய்யாமல் இருப்பது சரியா?
இதைக் கூட செய்ய முடியாத நாம் எப்படி வளர்ந்து வல்லரசாகப் போகிறோம்? இதற்க்கு ஒரு திட்டம் தீட்டி செயல் படுத்த முடியாத மடையர்களா நாம்? நம்மை நம்பியா அயல் நாட்டிலிருந்து வேலைகள் வந்து குவிகின்றன?

இந்த மாதிரி சர்ச்சை கிளம்பும்போதெல்லாம், பந்த், கடை அடைப்பு, போராட்டம் என்று திசை திருப்பி, முன்னேற்றத்துக்கான வழி கிடைக்காமலே செய்து வரும் கொடுமை என்று தான் மாறும்?

அரசியல்வாதி தானாய் திருந்துவானா? உச்ச நீதிமன்றம் இதையெல்லாம் சரியான பாதையில் வழி நடத்தத்தானே இருக்கிறது? உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கவே இட ஒதுக்கீடு வேண்டுமென்பது, கண்மூடித்தனமான, சிறுபிள்ளைத் தனம்.

இணையத்திலும், எல்லா சர்ச்சைகளுக்கும், கண்மூடித்தனமாக எதிர்ப்பையோ ஆதரவையோ வழங்காமல், அறிவுபூர்வமாக ஒவ்வொன்றையும் அலசவேண்டும்.

ஊருக்குள் இருக்கும், அரசியல் சார்பானவர்களின் நெறிகெட்ட செயல், இணையத்திலும் பரவ வேண்டாம்.

பாவம் நமது ஏழைகள். அவர்கள் வஞ்சிக்கப்பட்டவர்கள். நமது அரசாலும், நம்மாலும். அவ‌ர்க‌ளுக்கு தேவ‌யான‌ ச‌லுகைக‌ள் கொடுத்து, அதை அவ‌ர்களுக்கு ம‌ட்டுமே முழுதாகக் கிடைக்குமாறும் வ‌ழி செய்வோம்.

இன்னும் எத்தனை காலம்தான், ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கப் போகிறோம்?

Happy April 1st!

thoughts?

-BNI

தினகரனில் ப்ரசுரமான, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் சாரம்:


More links on this topic:
ஏன் வேண்டும் இடஒதுக்கீடு - குழலி

வாழ்க சனநாயகம் - நாகை சிவா

இட ஒதுக்கீடும், இடைக்காலத்தடையும் - ravi srinivas

இடஒதுக்கீடு இடைக்காலத் தடை: நம் கடமை - Prince Ennares Periyar.S

என் சமுதாயமே விழித்தெழு!! - சிவபாலன்

பந்த் - யார் முட்டாள் - IdlyVadai

Saturday, March 24, 2007

செய்தி - தெய்வம் நின்று கொல்லும் - 2

மஞ்சுநாத் என்று ஒரு இளைஞர் இருந்தார்.
IIT, IIM எல்லாம் படித்துவிட்டு $ சம்பாதிக்க வெளிநாடுகளுக்கு செல்லாமல், உள்ளூரிலேயே வேலைக்கு சேர்ந்தார்.
Indian Oil Cororation (IOC) நிறுவனத்தில் விற்பனைத் துறையில் சேர்ந்தார்.

உத்தர் ப்ரதேசத்தில் உள்ள ஒரு பெட்ரோல் வினியோக நிலையத்தில், கலப்படம் செய்து டீஸல் விற்கப்படுவதை கண்டித்து, கடைக்கு ஸீல் வைத்துவிடுவேன் என்று எச்சரித்தாராம்.

லஞ்சம் வாங்கிக் கொண்டு, எவன் எக்கேடு கெட்டால் என்ன என்று நினைத்து அடுத்த வேலையை பார்க்கத் தொடங்காமல், தன் கடமையை நேர்மையாக செய்தவர் மஞ்சுநாத்.

ஆத்திரம் அடைந்த கடையின் முதலாளி Monu Mittal அடியாட்களுடன், மஞ்சுநாத்தை வெட்டிக் கொன்றுவிட்டான்.
November 2005 நடந்த இந்த நிகழ்ச்சி பெரிய துயரத்தைத் தந்தது.

இந்த வழக்கில் Monu Mittal உள்பட 8 ஆட்களுக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

மகனை இழந்து தவிக்கும் மஞ்சுநாத்தின் பெற்றோருக்கு, இது ஆறுதல் தரும் செய்தி.

மேலும் விவரங்கள் இங்கே இருக்கிறது - Manjunath

கொலைகாரர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது. Monu Mittal gets death sentence, while others receive life sentencing.
விவரங்கள் இங்கே - Click here.

Saturday, March 03, 2007

Google செய்யும் இந்தி திணிப்பு?

Google தரும் பல நல்ல சேவைகளில் Google News உபயோகிக்க எளிதான அருமையான சேவை.
செய்திகளை பிரித்து கட்டம் கட்டி அழகாக காட்டும் google news முகப்புப் பக்கம் உபயோகமான ஒன்று.

அதில், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பக்கம் அமைத்து அந்த நாட்டுக்கான செய்தியை பிரித்து வழங்கி வந்தனர்.

சைனா, ப்ரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அவர்கள் மொழியிலேயே பக்கம் அமைந்திருக்கும்.

இந்தியாவுக்கான பக்கம் ஆங்கிலத்தில் அமைத்திருந்தார்கள். சட்டென்று ஒரே பக்கத்தில் முக்கிய நடப்புகளை அறிந்து கொள்ள உதவிய பக்கம், இன்று பார்த்தால் 'ஹிந்தி'க்கு உருமாறியிருந்தது.

'ஹிந்தி' தெரியாத என்னைப் போன்ற பலருக்கு இது ஏமாற்றம் அளிக்கிறது. வரும் நாட்களில், மற்ற மாநில பாஷைகளுக்கும் பக்கம் அமைக்க முயற்சி செய்வார்கள் என்று நம்புகிறேன்.

Sensationalize செய்வதர்க்காக இடப்பட்ட தலைப்பு அல்ல; தெரிந்தவர்களிடம் விவரம் அறியலாம் என்ற அவாவில் வைத்தது. விவரம் தெரியாதவர்கள் என்னைப் போல் Google news உபயோகிப்பவர்கள், கூகிளிடமே முறையிடலாம் - Google Contact Us page.



Friday, March 02, 2007

ஏமாற்றாதே, ஏமாற்றினாலும் ஏமாறாதே!

மாற்றப்படுதல் என்பது நாம் அனைவரும் வாழ்க்கையில் பல இடங்களில் சந்தித்த ஒன்றே.

சிறு வயதில் 'காக்கா தூக்கிட்டு போச்சு' என்று, அம்மா விளையாட்டாக, நம் கையில் சிக்கக் கூடாத பொருட்களை, ஒளித்து வைத்ததில் இருந்து தொடங்குகிறது இந்த ஏமாறுதல்.
அம்மா, நம் நன்மைக்காகச் செய்யும் ஏமாற்றுதல் போல், சின்ன சின்ன ஏமாற்றுதல்கள் பெரிய அளவில் பாதிப்புத் தராது.

பள்ளிப் படிப்பில், சில ஆசிரியர்கள், தனக்கு பிடித்த மாணவனுக்கு எப்பொழுதும் சற்று தூக்கலாகவே மதிப்பெண் போட்டு, நம்மை 'கீழேயே' வைத்திருக்கும்போதும், ஏமாற்றம் பெரிய அளவில் புரியாது.

வளர்ந்து வயதாகி, கல்லூரி, வேலை என்று எத்தனிக்கும் போது கிடைக்கும் பல ஏமாற்றங்கள் வேதனையையும் விரக்தியையும் தரத் துவங்கும்.
சமுதாயம் ஏற்படுத்திய ஏமாற்றங்கள் ஒரு பக்கம், தனி மனிதனால் தொடுக்கப்படும் துரோகங்கள் ஒரு பக்கம்.
மகளின் திருமணம், பிள்ளையின் கல்வி, வீடு வாங்க சேமிப்பு என்று குருவி போல் பார்த்துப் பார்த்து சேமித்ததெல்லாம், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, துரோகிகளிடம் கொடுத்து ஏமாந்த கூட்டம் பெரிது.

அரசியல் ஏமாற்றங்கள் சொல்லி மாளாது. இந்தப் பதிவு அதற்காக அல்ல.

இந்த ஏமாற்றங்களை வடிவமைத்து ஒரு தொழிலாகவே செய்பவனை என்னதான் செய்வது? இவர்கள் இப்படித் துணிய யார் காரணம் - அவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களும் விரக்திகளும் இருக்குமோ? அல்லது, சுலப வழியில் நோண்டித் தின்னும் கேவல மனம், இயற்கையே அவனுக்குத் தந்ததா?

இப்படி ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டத்துக்கு உண்ணும் உணவு ஜீரணிக்குமா?
மன நிம்மதி கிட்டுமா?
கிட்டுமென்றால், நாம் மட்டும் என்ன முட்டாள்களா -- நேர்மை தவறாமல் வாழ்வதர்க்கு?

ஒரு வேளை, இந்த உதவாக்கரைகளை தெய்வம் நின்று கொல்லுமோ?

எது எப்படியோ, ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவன் தானாய் திருந்தப் போகும் சூழல் நம் வாழ்நாளில் இல்லை.
ஒட்டு மொத்த சமுதாய முன்னேற்றமும், கல்வி அறிவும், விழிப்புணர்வுகளும் தான் நம் மக்களை ஏமாளிகள் ஆகாமல் இருக்க உதவும்.

அதிக வட்டி ஆசையூட்டி, நுட்பமான வழியில் கொள்ளை அடிப்பவனிடம் படித்தவனும் ஏமாந்துதான் போகிறான்.
இதே ரீதியில், Internet மூலமாக phishing எனப்படும் திருட்டு நுட்பம் கொண்டு பல கோடிக் கணக்கில் களவு நடக்கிறது.

இதே போல் (இந்த பதிவு எழுதக் காரணமான), 1-million dollar லாட்டரி விழுந்ததாகவும், அந்தப் பணம் நமக்கு வந்து சேர, ஒரு சிரிய தொகையை ( $100 ) அவர்களுக்கு processing fee அனுப்ப வேண்டும் என்றும் விதம் விதமான கதைகளுடன் ஈ.மெயில் அனுப்பும் ஒரு திருட்டுக் கூட்டமும் உண்டு.
அயல் நாடுகளில் இருக்கும் பலருக்கு, இது ஏமாற்று வேலை என்று தெரிந்திருக்கும்.

இந்தியாவில் இருக்கும் நண்பர்களுக்கு, இந்தப் புதிய திருட்டு நுட்பம் பற்றி, அதிகம் தெரியாததால், ஏமாறும் வாய்ப்பும் அதிகம். (ஒரு நண்பன் ஏமாறும் விளிம்பில் நின்று கொண்டிருந்தான். நல்ல வேளை மற்றவரிடம் விசாரித்ததால் பிழைத்தான்).

நண்பர்களே, ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் -
In this world, absolutely NOTHING comes for FREE.

இந்த மாதிரி மடல்கள் மூலம் வரும் மறைமுகத் திருடர்களிடமோ அல்லது நிஜ வாழ்க்கை திருடர்களிடமோ உங்களின் கடின உழைப்பால் வந்த பணத்தையோ, பொருளையோ கொடுத்து ஏமாறாதீர்கள்.
If its too hard to be true, it is probably a fake!

நண்பர்களே, உங்கள் சுற்றத்தில் இதுபோல் யாரும் ஏமாறாமல் இருக்க விழிப்புணர்வு கொடுங்கள்.

இதோ ஒரு சாம்பிள் திருட்டு மடல், உங்கள் பார்வைக்கு:
NO_22 ORANGE GROVE
JOHNNESSBURG
SOUTH AFRICA
+27-782-630-326

EMAIL:livinusjomo
ATTN:

Dear sir/madam,

With all due respect My good friend. My name is MR.LIVINUS JOMO, the eldest son of MR FRANK JOMO of ZIMBABWE. It might be a surprise to you where I got your contact address, I got it from the South African Information Network Online (SAINO)/South Africa Trade Centre.And it is coming to you with good intention. During the current crises against the farmers of Zimbabwe by the supporters of our President,ROBERT MUGABE to claim all the white owned farms in our country, he ordered all the white farmers to surrender their farms to his party members and their followers.

My father was one of the great and best farmers in the country and knowing that he did not support the president’s political ideology, the president’s supporters invaded my father’s farm burnt down everything, shot him and as a result of the wounds sustained, he became sick and died after five days.

And after his death, I with my younger brother decided to move out of Zimbabwe for the safety of our lives to South-Africa which is a neighbouring country. BUT, before he died HE WROTE HIS WILL, which reads"(MY BELOVED SON ,I WISH TO DRAW YOUR ATTENTION TO THE SUM OF($20,000,000=00).TWENTY MILLION U.S DOLLARS WHICH I DEPOSITED IN A BOX WITH A SECURITY COMPANY IN JOHANNESBURG (SOUTH-AFRICA). IN CASE OF MY ABSENCE ON EARTH CAUSED BY DEATH ONLY". You should solicit for reliable foreign partner to assist you to transfer this money out of SOUTH AFRICA for investment purpose. I deposited the money in your name and it can be claimed by you alone with the deposit code. your mother has all the documents. Take good care of your mother and brother."

From the above, you will understand that the lives and future of my family depends on this money as much, I will be very grateful if you can assist us. I with my younger brother are now living in South-Africa as POLITICAL ASYLUM SEEKERS and the financial law of SOUTH-AFRICA does not allow ASYLUM SEEKERS certain financial rights to such huge amount of money .In view of this, I cannot invest this money in South-Africa, hence I am asking you to assist me transfer this money out of South-Africa for investment purposes. For your efforts,

I am prepared to offer you 20% of the total fund,5% for charity, while 5% will be set aside for local and international expenses and 70% will be kept for me and my family . Finally modalities on how the transfer will be done will be conveyed to you once we establish trust and confidence between ourselves. Looking forward to your urgent reply .For detailed information, please contact me on my e-mail address or via my telephone.

NOTE: THE KEY WORD TO THIS TRANSACTION IS ABSOLUTE CONFIDENTIALITY AND SECRECY. THIS TRANSACTION IS 100% RISK FREE. YOUR URGENT RESPONSE WILL BE HIGHLY APPRECIATED.

REMAIN BLESSED.

LIVINUS JOMO
{for the family}