Wednesday, December 20, 2006

சபாபதி சரவணனின் - சிலுவையில் அறையப்படும் மாணவர்கள்

வேலை பளு காரணமாக இப்பெல்லாம் பதிவுகளை படிப்பதோடு சரி. எழுத அவகாசம் கிடைப்பதில்லை.

இன்று படித்த ஒரு நல்ல பதிவு சபாபதி சரவணன் சாரின் "சிலுவையில் அறையப்படும் மாணவர்கள்".

அதற்கான விளம்பரம் மட்டுமே இது
இங்கே சொடுக்கி படிக்கவும் சிலுவையில் அறையப்படும் மாணவர்கள்

சபாபதி சரவணன், தொடரட்டும் இந்த மாதிரி சமூக நலம் பேணும் பதிவுகள்.

-BNI

Tuesday, December 05, 2006

இந்தியா முன்னேறலயா? தாராளமயம் ஒரு சாபக்கேடா?

ஒரு பக்கம் அந்நியச் செலாவணி போதும் போதும் என்னும் அளவுக்கு கையிருப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
இந்தியனின் மூளை இல்லை என்றால், பல நிறுவனங்கள் ஸ்தம்பித்துவிடும் நிலையும் பல இடங்களில் காணக் கிடைக்கிறது.
முதல்வரும், பிரதமரும், ஜனாதிபதியும், தொழிலதிபர்களும் 2020 ல், இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று தினமொரு கதை சொல்லுகிறார்கள்.
பங்கு சந்தை அமெரிக்காவுக்கு போட்டியாக மேலேறுகிறது.

இதை எல்லாம் பார்க்கும் போது, எனக்கும் நம்பிக்கை துளிர் விடத்தான் செய்கிறது. வல்லரசு ஆயிடுவோமோ?

ஆனால்,
  • ஊரில் நான் காணும் இடம் எங்கிலும் அத்தியாவசியமான சுகாதார வசதி கூட இன்னும் கிடைக்காதோர் பலர் இருக்கிறார்கள்.
  • ஒரு வருடம் மழை பொய்த்தால், ஒருவரை ஒருவர் தண்ணீருக்காக அடித்துக் கொல்லும் நிலை.
  • என்ன ஆனாலும் சரி, திருந்தவே மாட்டோம். பொதுநலமாவது மண்ணாவது என்று அலைந்து கொண்டிருக்கும் அரசியல் காட்டுமிறாண்டிகள் ஒருபுரம்.
  • அவரவர் வீட்டின் வேலிக்குள் மட்டும் ஒழுங்காக இருந்தால் போதும். ஊரும், தெருவும் எப்படி இருந்தால் எனக்கென்ன என்று மெத்தென வாழ்க்கை வாழும் பொதுஜனம்.
  • அசந்தால் அடுத்தவர் தலையைக் கூட விழுங்கத் தயங்காத கயவர் கூட்டம் ஒருபுறம்.
  • வளர்த்த சமூகத்தை பற்றி ஒரு சிந்தனையும் இல்லாது, தான், தனக்கு என்று மட்டும் எண்ணும் படித்த கூட்டம் ஒரு புறம்.
  • நண்பர் ராஜவனஜ் சுட்டிக்காட்டிய இந்தப் பதிவில் விவசாயிகள் அனுபவிக்கும் கொடுமைகளையும் பாருங்கள்.

    எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? வலைப்பதிவில் எழுதுபவர்/படிப்பவர்களாகிய நாம் நல்ல உத்யோகத்தில் இருக்கிறோம். இதை எல்லாம் படித்து சப்புகொட்டி அடுத்த வேலையை பார்க்க கிளம்பி விடுவோம்.

    இப்படி எல்லோரும் இருப்பதால் தான், மேலே உள்ள குறைபாடுகள் நம் ஊரில் பஞ்சமில்லாமல் த்ழைத்து வாழ்கிறது.

    5 ஸ்டார் ஓட்டலில் சாப்பாடும், plasma டி.வி யும், Hyundai காரும், தாய்லாந்து சுற்றுப்பயணமும் கொண்டு சொகுசு வாழ்க்கை மட்டும் வாழ்ந்தால், நாளை உங்கள் குழந்தைகளுக்கு நல்ல சமுதாயமும் வாழும் இடமும் கிடைக்குமா?

    atleast, ஓய்வு பெற்றவர் யாரேனும் இருப்பீராயின், களமிறங்கி இந்த குறைபாடுகள் நடக்குமிடத்தில், அவ்வப்போது எதிர்ப்பை காட்டவேண்டும்.
    மற்றவர்கள், தங்களால் முடிந்ததை செய்ய வேண்டும்.

    உங்களால் முடிந்தது என்ன?
  • உங்கள் ஊரில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிர்ப்பை காட்டுங்கள். தைரியமில்லையா? அனானி பெயரில், பதிவாகவாவது எழுதுங்கள்.
  • முடிந்தவரை லஞ்சம் கொடுக்காதீர்கள். லஞ்சம் கேட்பவரைப் பற்றி பதிவாக எழுதுங்கள்.
  • நொடிந்தவர் குழந்தைகள் கல்விக்கு உதவுங்கள்.
  • விவசாயிகளின் நிலை? - என்னிடம் இதர்க்கு தீர்வு இல்லை. அவர்களே புரட்சி செய்தால் தான் உண்டு(?) எந்தத் தலைவனை நம்பியும் பிரயோஜனமில்லை.
  • உங்களுக்கே தெரியும் என்ன பண்ணணும்னு, அதை செய்ய விடாமல் தடுக்கும், மெத்தனத்தை குறையுங்கள்.


    சிங்கபூர், அமெரிக்கா, ஐரோப்பா மாதிரி எல்லாம் வளரலன்னாலும், எல்லா இந்தியனும் உடுத்த துணியும், உண்ண உணவுமாவது கிடைக்குமா 2020ல் ?

    கலாம் மாதிரி (பொதுநலத்தை மட்டும் எண்ணும்) 1000 MLA/MP கிடைத்தால் நடக்கலாம். கிடைப்பாரா?

    What is your take on this? Please DO comment. Thanks!

    பி.கு. படித்த இளைஞர்கள் சிலர் வலையில் தேவை இல்லா சண்டை போட்டு நேரத்தை விரையம் செய்யாமல், கூட்டு முயற்சியுடன் ஒரு வலைதளம் தொடங்குங்களேன் (தேன்கூடு,தமிழ்மணத்துக்கு போட்டியாக அல்ல). வலை தளத்தில், நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை எல்லாம் பட்டியலாக சேர்க்கும்படி செய்தால், உபயோகமாக இருக்கும். (உ.ம் லஞ்சம் வாங்குபவன், ஏய்ப்பவன், ஒன்றும் செய்யாத MLA/MP, விவசாயியை கவனிக்காத உள்ளூர் தலைவர், etc.. ). பின்னூட்டத்தில் ideas தெரிவியுங்கள்.
  • Friday, December 01, 2006

    அவசர சந்திப்பு - கருணாநிதி, ஜெயலலிதா, விஜய்காந்த், வை..(part2)



    Technical difficulties in previous post. please click link below to read the post:

    Click here